எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் ஐ.எல்.எஸ். ஆண்டனா மீது மோதியதற்கு பைலட்டின் தவறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
திருச்சியில் இருந்து துபாய்க்கு நேற்று முன்தினம் இரவு 1.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 130 பயணிகள், பைலட் மற்றும் பணியாளர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 136 பேர் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் சிறிது தூரம் சென்று மேலே எழும்பி பறக்க தொடங்கும் போது மிகவும் தாழ்வாக பறந்தது. அப்போது ஓடுதளத்தின் அருகில் இருந்த ஐ.எல்.எஸ். ஆண்டனா (விமானத்தை தரையிறக்க வழிகாட்டும் கருவி) மீது பயங்கரமாக மோதியது. இதனால் விமானம் குலுங்கி நிலை தடுமாறியது.
என்றாலும் விமானி விமானத்தை உயரே கிளப்ப முயன்றார். அப்போது அந்த விமானம் எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீதும் பயங்கரமாக மோதியது. பயங்கர சத்தத்துடன் மோதியதால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதேபோல் விமானம் மோதியதில் 50 அடி நீளத்திற்கு விமான நிலையத்தின் காம்பவுண்டு சுவர்களும் இடிந்து விழுந்தன. விமான நிலைய பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த முள்வேலிகளும் அறுந்து விழுந்தன.
விமான நிலையத்தின் அலுவலக ஊழியர்கள் துபாய் விமானம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதை கண்காணிப்பு கேமிராவில் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் பைலட் விமானத்தை நிறுத்தவில்லை. தரை இறக்காமல் தொடர்ந்து விமானத்தை மேலே இயக்கினார். டவர்கள் மற்றும் சுவரில் மோதியதால் விமானத்தின் முன்பகுதி, டயர் பகுதி ஆகியவை சேதம் அடைந்தன. இந்த சேதத்துடன் விமானம் வானில் பறக்க தொடங்கியது. விமானம் குலுங்கியதாலும் விபத்து நடந்ததுபோன்ற சத்தம் கேட்டதாலும் பயணிகள் கூச்சலிட்டனர். ஆனாலும் விமான பணியாளர்களும், பைலட்டும் பயணிகளை சமாதானப்படுத்தினர். விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை, பத்திரமாக விமானம் தரையிறக்கப்படும் என்றும் அவர்களிடம் பைலட் உறுதி கூறினார்.
இதற்கிடையே துபாய்க்கு புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் துபாய் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும் நீண்ட தூரம் பயணிக்க அனுமதிக்க வேண்டாம் என திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு துபாய் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. விமானம் பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது பைலட் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கேட்டார். ஆனால் துபாய் விமான நிலையம் அனுமதி மறுத்து விட்டது. விமானத்தின் டயர்கள் சேதம் அடைந்திருந்ததால் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என்பதால் துபாய் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.
இதை அறிந்த பயணிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் பத்திரமாக தரையிறங்குமா? உயிர் தப்புவோமா? என்று பீதி அடைந்தனர். தொடர்ந்து 4 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே தவிப்பும், பதைபதைப்புமாக இருந்தனர். அவர்களை விமான பணிப்பெண்கள் தொடர்ந்து சமாதானப்படுத்தி வந்தனர். விமானம் மும்பையில் தரை இறங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும், எனவே யாரும் பயப்பட தேவையில்லை, எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் அவர்கள் பயணிகளுக்கு நம்பிக்கை ஊட்டினர். விமானம் வானில் 3 மணி நேரம் பயணித்த நிலையில் துபாயில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் வானிலேயே வட்டமடித்து பின்னர் மும்பை நோக்கி பறந்தது. நேற்று காலை 6.10 மணிக்கு அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் அனைவரும் துபாய் செல்வதற்கு அங்கு தயாராக மற்றொரு விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 130 பயணிகளும் அந்த விமானத்தில் ஏறி துபாய் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் ஓடு தளத்தில் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது பைலட்டின் கவனக்குறைவா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். விபத்தில் விமான நிலைய ஓடுதளத்தை ஒட்டியுள்ள ஐ.எல்.எஸ். ஆண்டனா மட்டுமின்றி விளக்குகளும் உடைந்து நொறுங்கியதோடு, ஓடுதளமும் சேதம் அடைந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று காலை விமான நிலையத்திற்கு வந்து பார்த்தார். மேலும் விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர் ப.குமார் எம்.பி., திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஆகியோரும் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் கூறுகையில், திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுதளத்தை விட்டு மேலே எழும்பும்போது ஏன் குறைந்த உயரத்தில் மிகவும் தாழ்வாக பறந்தது என பைலட்டிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...