முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்க தேவையான அனைத்து திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்துகிறது அம்மாவின் அரசு ஸ்ரீவில்லி.யில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

ஸ்ரீவில்லி- குடிநீர் வசதி, சாலை வசதி, மேம்பாலம், சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து திட்டங்களை உடனடியாக செயல்படுத்துகின்ற அரசாக அம்மாவின் அரசு உள்ளது  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு  அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) விருதுநகர் மண்டலத்திற்கான 5 புதிய பேருந்துகளை விருதுநகர் எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் தலைமையில், ஸ்ரீவில்லி. எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலையில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,
தமிழக மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்காக, அம்மா  பல்வேறு புதிய வழித்தடங்களையும், புதிய பேருந்துகளையும் அறிமுகம் செய்து அதனை செயல்படுத்தினார். அம்மாவின் வழியில் செயல்படுகின்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 471 புதிய அதிநவீன பேருந்துகளை சென்னையில் 10.10.18 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட பொதுமக்களின் போக்குவரத்து  தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், விருதுநகர் மாவட்டத்திற்கு 25 புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்து, முதற்கட்டமாக சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து 8 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 05 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 12 புதிய பேருந்துகள் விரைவில் இராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்படவுள்ளன.
விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெற தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனுக்குடன் செய்து வருகிறது. முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஒன்றியத்திலுள்ள கிராமப்பகுதிகளுக்கும், சேத்தூர், செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியபுரம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு மற்றும் கொடிக்குளம் ஆகிய பேரூராட்சிகளுக்கு தாமிரபரணி குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே குடிநீர் வசதி, சாலை வசதி, மேம்பாலம், சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து திட்டங்களை உடனடியாக செயல்படுத்துகின்ற அரசாக அம்மா வழியில் செயல்படுகின்ற அரசு செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இப்புதிய பேருந்துகளில் சிவகாசி - கோயம்பத்தூர் வழித்தடத்திற்கு ஒரு பேருந்தையும், இராஜபாளையம் - மேட்டுப்பாளையம் வழித்தடத்திற்கு 2 பேருந்துகளையும், இராஜபாளையம் - கோயம்புத்தூர் வழித்தடத்திற்கு ஒரு பேருந்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை - செங்கோட்டை வழித்தடத்திற்கு ஒரு பேருந்தையும் ஆக மொத்தம் 5 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மேலாண் இயக்குநர் சேனாதிபதி, பொதுமேலாளர்  (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விருதுநகர்) மகேந்திரகுமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாட்சியர் சுப்பிரமணியன், துணை மேலாளர்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விருதுநகர்) பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்  உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து