முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்:

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் நகரில் சிறப்புடன் நடைபெற்றது.இதில் தங்களது 30அம்ச கோரிக்கையை தமிழகஅரசு நிறைவேற்றி தந்திடவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் நகர் உசிலம்பட்டி சாலையிலுள்ள சூர்யா மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான நியாய விலைக்கடை பணியாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.செல்லத்துரை தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.கோபிநாத் முன்னிலை வகித்தார்.மாநில இணைச் செயலாளர் இரா.தனுஷ்கோடி வரவேற்று பேசினார்.முன்னாள் மாநில தலைவர் கு.பால்பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது தனித்துறை,100 சதவீதம் கணிணி மயம்,டிஎன்சிஎஸ்சி-க்கு இணையான ஊதியம்,பொட்டலமுறை,சரியான எடையில் பொருட்கள் வழங்குதல்,ஓய்வூதியம்,மருத்துவப்படி உயர்வு,பணிவரன்முறை செய்தல் உள்ளிட்ட 30அம்ச கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்றி தந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதே போல் தமிழக அரசு வழங்கிடும் ரூ.5 ஆயிரம் தீபாவளிபண்டிகை முன்பணத்தை ரூ.15ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் நியாய தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பாலமுருகன்,அருணாசலம்,சிவக்குமார்,ராமச்சந்திரன்,ஜெயச்சந்திரராஜா,நெடுஞ்செழியன்,விசுவநாதன்,பிரகாஷ்,துரைசேகர்,ராமலிங்கம்,தினகரன்,சோமேஸ்வரன்,மாரிமுத்து,நாகராஜன்,மாரிமுத்து,தனசேகரன்,மனோகரன்,ராஜா,பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில் மாநில துணைத்தலைவர் டி.செல்லத்துரை நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து