முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தத்தெடுத்த பிள்ளைகளை பலாத்காரம் ரஷ்யாவை சேர்ந்தவருக்கு 22 வருட சிறை

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கோம்சோமோல்க் : தான் தத்தெடுத்து வளர்த்த பிள்ளைகளை பலாத்காரம் செய்த ரஷ்யாவை சேர்ந்தவருக்கு 22 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் லிஷாவ்ஸ்கி. இவருக்கு வயது 37. இவரது மனைவி பெயர் ஓல்கா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். விக்டர் ஒரு செருப்பு கடையை சொந்தமாக வைத்திருக்கிறார். கைவிடப்பட்ட பிள்ளைகளை தத்தெடுக்கும் ஆர்வம் கொண்டவிக்டர். 9 சிறுவர், சிறுமிகளை வளர்த்து வருகிறார். இந்த விஷயத்தில் விக்டருக்கு, மனைவி ஓல்காவும் உறுதுணையாக இருந்து வந்துள்ளார். இதனால் இந்த தம்பதிக்கு அம்மாநில அரசு மாதந்தோறும் 265 பவுண்டுகள் நிதி அளித்து வருகிறது

விக்டர் வளர்த்து வரும் சிறுமிகளில் பெரும்பாலும் 12 முதல் 17 வயது உடையவர்கள். இந்த பிள்ளைகளை தானே சோறு போட்டு வளர்த்து, ஆதரித்து, தானே பலாத்காரமும் செய்து வந்திருக்கிறார் விக்டர். இப்படியே 5 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. இதனை பொறுக்க முடியாமல் ஒரு சிறுமி மட்டும் துணிந்து ஓல்காவிடம் 5 வருஷமாக நடந்த கொடுமையை எல்லாம் சொல்லி விட்டார். இதை கேட்ட ஓல்கா கடும் அதிர்ச்சி அடைந்து சிறுமிகள் சொன்னதை ஒன்றுவிடாமல் போலீசில் சொன்னார். அதன் அடிப்படையில் போலீசார் விக்டரை கைது செய்து விசாரணையை துவக்கினர். அப்போது விக்டர் கூறியதை கேட்டு போலீசார், ஓல்கா, உட்பட எல்லாருமே அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

அது, விக்டர் இத்தனை காலமாக தான் வளர்த்து வந்த சிறுமிகளை 5 ஆண்டுகளில் 900 முறை மிரட்டி கற்பழித்து வந்திருக்கிறார் என்பதுதான். உடனடியாக விக்டரை கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தினர் போலீசார். இதையடுத்து விக்டருக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து