முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரக் குழந்தைகளாக நினைத்து சிங்கங்களை வளர்த்து வரும் தாத்தா

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

மெக்சிகோ சிட்டி, என் 3 பேரக்குழந்தைகளையும் என்கிட்ட இருந்து பிரிக்க யாராலும் முடியாது. எனக்கு என் பேரக் குழந்தைகளை வளர்க்க எல்லா உரிமையும் இருக்கு என்று சற்று கோபமாகவே சொல்கிறார் மெக்சிகோ நபர் ஒருவர். இவர் பேரக்குழந்தைகள் என்று சொல்வது பயங்கரமான 3 சிங்கங்கள். 

மெக்ஸிகோவில் தன் வீட்டு மொட்டை மாடியில் இந்த 3 சிங்கங்களை வளர்த்து வரும் இவரது பெயர் ஒமர் ரோட்ரிகஸ். இவர் வசிக்கும் இடம், ஒமர் என்ற பகுதி. அந்த இடம் ரொம்பவே ஜன நெருக்கடி இருக்கக் கூடிய பகுதியாகும். ஒவ்வொரு முறையும் சிங்கங்கள் கத்துவது அப்பகுதியினருக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது. அதனால் அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். அதிகாரிகளும் விரைந்து வந்து, வீட்டில் இருந்து சிங்கங்களை வெளியேற்றுங்களேன் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

சிங்கங்களை வளர்க்க முறையான ஆவணங்களை அவர் வைத்திருந்ததால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அழிந்து வரும் வெள்ளை நிற சிங்கங்களை தன் பேரக் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று சொல்கிறாராம் அந்த நபர். இதே கருத்தை யுனிவர்சல் என்ற நாளிதழுக்கு பேட்டியும் அளித்துள்ளார். பேரக்குழந்தைகள் என்று சொல்லும் இந்த சிங்கங்களை 20 வருஷங்களாகவே வளர்த்து வருகிறாராம் இந்த சிங்க தாத்தா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து