எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற உழைப்போம். அ.தி.மு.க.வை எந்நாளும் நம் கண்களெனக் காப்போம் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு விழாவையொட்டி முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களுக்கு எழுதிய மடல் வருமாறு:-
தமிழக மக்கள் மீது கொண்ட எல்லையில்லாத அன்பின் அடையாளமாக எம்.ஜி.ஆர். உருவாக்கிய நம் இயக்கம் 46 ஆண்டுகளைக் கடந்து 47-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் நம் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியும், பெருமிதமும் பீரிட்டு எழுகிறது. 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இயக்கம் தோன்றிய நாளையும், அதற்கு முன்னும், பின்னும் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் நாம் அனைவரும் பசுமையாக நினைவில் வைத்திருக்கிறோம். எம்.ஜி.ஆர். தன்னுடைய பொன்னான நேரத்தையும், கடின உழைப்பையும், சிரமப்பட்டு சேர்த்த பெரும் செல்வத்தையும் வாரி வழங்கி, அ.தி.மு.க.வை வளர்த்தார். தந்தை பெரியாரும், அண்ணாவும் வகுத்தளித்த திராவிடர் இயக்க சிந்தனைகளையும், சமுதாய மறுமலர்ச்சிக் கொள்கைகளையும் நிலை நிறுத்தி, மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி தரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு உழைத்த எம்.ஜி.ஆரின் உழைப்பைப் பயன்படுத்தி விட்டு, அவரை உதாசீனப்படுத்திய தி.மு.க. தலைமையை தட்டிக் கேட்டு, அண்ணாவின் பேரியக்கத்தை அவர் ஒருவரால்தான் காப்பாற்றி வளர்க்க முடியும் என்று தமிழக மக்கள் முடிவு செய்ததால், மக்களின் மனநிலையை உணர்ந்து அ.தி.மு.க.வை தொடங்கினார் எம்.ஜி.ஆர்.
சுயநலமிக்க துரோகிகளால், எம்.ஜி.ஆர். மீது மக்கள் கொண்ட பேரன்பை தாங்க முடியவில்லை. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு அந்தத் தீய சக்திகள் எம்.ஜி.ஆருக்கும், அவர் பின் அணிவகுத்த நம்மைப் போன்ற தொண்டர்களுக்கும் இழைத்த கொடுமைகள் ஏராளம், ஏராளம். அவற்றையெல்லாம் கடந்து நம் இயக்கம் இன்று மகத்தான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், ஆட்சி அதிகாரம் வழியாக தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்விற்கும் நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உழைத்த உழைப்பை நாம் நேரில் கண்டோம். தன்னையே அர்ப்பணித்து, இருள் அகற்ற உருகும் மெழுகாய் வாழ்ந்து, தியாகத்தில் தோய்ந்து ஜெயலலிதா அ.தி.மு.க.வை காப்பாற்றினார். மக்களுக்குத் தொண்டாற்ற ஓர் அருமையான நல்லரசையும் நிறுவிச் சென்றிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் அரசியல் பாதையை அறியாதவர்களும், ஜெயலலிதாவின் தியாகத்தின் உயர்வை மதிக்காதவர்களும், திடீர் தலைவர்களாக முளைத்து அதிகார போதையில் திளைக்க மனக்கோட்டை கட்டுபவர்களும், அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க நினைத்து, இன்று மக்களால் அடையாளம் காணப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வையும், அதன் தொண்டர் பலத்தையும் எளிதாக எடை போட்டு விட்டு அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்கள் இன்று, அ.தி.மு.க.வுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் மகத்துவத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கிடக்கின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தவாறு, அ.தி.மு.க. ஓர் ஆலமரம். ஆயிரம் காலத்துப் பயிர். இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்களுக்காகப் பாடுபடப்போகும் நல்லியக்கம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த நம் பேரியக்கத்தை, தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்ல நாம் அனைவரும் உறுதி ஏற்கும் தருணம் தான் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம். எம்.ஜி.ஆர். வகுத்தளித்த, பேரறிஞர் அண்ணாவின் அரசியல் பாதையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து காட்டியவாறு, நம் பொது வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்திட இந்நாளில் சபதம் ஏற்போம். தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் நம் இயக்கத்தை மேலும் வலுப்படுத்திட அயராது உழைப்போம். மக்கள் ஆதரவைப் பெற்று எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற உழைப்போம். அ.தி.மு.க.வை எந்நாளும் நம் கண்களெனக் காப்போம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.