முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிபொருள் விலையில் அரசு தலையிடாது - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : எரிபொருள் விலையில் அரசு தலையிடாது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையிடாது. சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, அண்மையில் லிட்டருக்கு தலா ரூ.2.50 -ஐ குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களும் தங்கள் வரியில் தலா ரூ.2.50-ஐ குறைத்தன. இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 5 வரை குறைந்தது. இந்நிலையில், அவற்றின் விலை மீண்டும் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசு மீண்டும் இதே போன்ற விலைக் குறைப்பு நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

தலையீடு இருக்காது

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். இதில் அரசின் தலையீடு எதுவும் இருக்காது.

பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 வரை மத்திய அரசு அண்மையில் குறைத்தது. இது தொடர்பான மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல மாநில அரசுகளும் விலையை மேலும் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுத்தன. அதே நேரத்தில் டெல்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள் விலையைக் குறைக்கவில்லை. அது ஏன் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து