எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு எடுத்து வருகிறது என்றும், அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்டம், ஒமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து எடப்பாடிக்கு செல்லும் வழியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி: சபரிமலைக்கு பெண்கள் செல்வது பற்றி ...
பதில்: அது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. அதில் விமர்சனத்திற்கோ, கருத்து சொல்வதற்கோ எதுவுமில்லை.
கேள்வி: மத்திய உள்துறை அமைச்சகம் கேரளா பிரச்சினையையடுத்து, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் பாதுகாப்பு கருதி ஒரு அறிக்கை அனுப்பியருப்பதாக சொல்லியிருக்கிறார்கள், எப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
பதில்: தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. அந்த சம்பவம் நடைபெறுவதற்கு எவ்வித வாய்ப்பும் கொடுக்காத அளவிற்கு காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
கேள்வி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்களே?
பதில்: ஏற்கனவே ஜாக்டோஜியோ அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக்குழு அறிவிக்கப்பட்டு ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளெல்லாம் அரசால் அதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே, இன்றைக்கு அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அரசைப் பொறுத்தவரைக்கும், நிதிநிலைக்கு ஏற்றவாறு, அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
கேள்வி: ஏற்கனவே இருந்த பென்சன் ஸ்கீம் வேண்டுமென்று சொல்கிறார்களே?
பதில்: அது இரண்டு மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
கேள்வி: தேர்தல் வாக்குறுதியில் அம்மா இந்த மாதிரி செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்: நிதி ஆதாரம் இல்லையே, நிதி ஆதாரம் இருந்தால்தானே எல்லாம் கொடுக்க முடியும். தமிழகத்தின் 7-வது ஊதியக்குழு வகையில் 14,719 கோடி அதற்கு மட்டும் அரசு கூடுதலாக செலவழிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது, அகவிலைப்படியும் உயர்த்தியிருக்கிறார்கள், அதில் கிட்டத்தட்ட 1200 கோடி வழங்கப்படுகிறது. இப்படி அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது முறைப்படி அரசால் தக்க உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கேள்வி: இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா?
பதில்: அரசாங்கத்தின் நிதிச்சுமை குறித்து அரசு ஊழியர்களுக்கு முழுக்க முழுக்க தெரியும். ஏனென்றால், அவர்கள்தான் இந்த அரசாங்கத்தையே நடத்தக்கூடிய ஒரு நிலையில் இருக்கின்றவர்கள். அரசாங்கத்தின் நிதிநிலைமை அவர்களுக்கு நன்றாக புரியும், அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?
பதில்: ஏற்கனவே பலமுறை அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறோம். அந்தத் துறையைச் சார்ந்த அமைச்சகம் மற்றும் துறைச் செயலாளர் அழைத்து பேசுவார்கள்.
கேள்வி: தமிழக முதல்வர் மட்டும் எங்களை அழைத்துப் பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்களே?
பதில்: கடந்த காலத்தில் சுமார் இரண்டு வருடம் வரை அதை நீட்டித்துத்தான் வழங்கினார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. அதைப் புரிந்து, அம்மாவினுடைய அரசு அவர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் சம்பளத்தை வழங்கி வருகிறது. அவர்கள் இந்தக் கோரிக்கை வைப்பதற்கு முன்பே அவற்றை உடனே வழங்கியிருக்கிறோம்.
கேள்வி: எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்களே?
பதில்: நாட்டில் எல்லோருக்கும் கேட்க உரிமையுண்டு. இது ஜனநாயக நாடு, அந்த அடிப்படையில் அவர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
கேள்வி: டெங்கு காய்ச்சல் அடுத்தடுத்து பரவி வருகிறதே...
பதில்: இப்பொழுது தமிழகம் முழுவதும் பருவமழை பெய்த காரணத்தினாலே தேங்கியிருக்கின்ற தண்ணீரை அந்தப் பகுதியில் இருக்கின்ற மாநகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் அந்த நகரப் பகுதிகளிலெல்லாம் தண்ணீர் தேங்காமல் தண்ணீரை அகற்றி, டெங்கு கொசு உற்பத்தியாகாத அளவிற்கு மருந்து தெளித்தும் முன்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அரசாங்கமே முழுவதும் செய்துவிட முடியாது, பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. பழைய டயர், உடைந்து போன பக்கெட்டுகளில் தண்ணீர் தேங்குகிறது. அந்தத் தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. பொதுமக்கள் விழிப்போடு இருந்து, மழை பெய்கின்ற காலங்களிலே தங்கள் வீட்டை சுற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதை அந்த வீட்டின் உரிமையாளர் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, பொதுமக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும். அரசைப் பொறுத்தவரைக்கும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 6 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 7 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை பற்றி பரவும் தகவல் : டுவிட்டர் நிறுவனம் விளக்கம்
18 Mar 2024லண்டன் : இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து பரவும் தகவலுக்கு டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.