முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஜமால் கொலை: சவுதிக்கு அமெரிக்கா மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல்,பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது உலக நாடுகள் இடையே போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. இவர் சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. இது எண்ணெய் வள நாடுகள் இடையே பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்த கொலையில் சவுதி இளவரசர் முகமது சல்மானுக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று சவுதி பத்திரிக்கைகளே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அவரின் நேரடி உத்தரவின் பேரில்தான் இந்த கொலை நடந்து இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.ஜமாலை கொலை செய்ய 20 பேர் கொண்ட கொலைகாரப்படை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். இந்த கொலைக்கு காரணமான நபர்கள் என்று மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சவுதி உலக நாடுகளை ஏமாற்ற இந்த கைதை செய்கிறது என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக இந்த கொலையில் முக்கியமான ஆதாரங்களை எல்லாம் வெளியிட போகிறோம் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த நிலையில் சவுதிக்கு எதிராக செயல்பட கடந்த சில மாதங்களாக தீவிர திட்டத்தில் இருந்து அமெரிக்கா, இதை கையில் எடுத்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கொலையை தொடர்ந்து வெறும் 24 மணி நேரத்தில் இரண்டு முறை சவுதிக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டு விட்டார். இதுதான் தற்போது போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து