முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக இடைத்தேர்தலுக்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு தேவகவுடா - சித்தராமையா சந்திப்பு இரு கட்சி தொண்டர்கள் உற்சாகம்

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதனால் காங்கிரஸ் - ம.ஜ.த. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. தனித்தும் காங்கிரசும், ம.ஜ.த.வும் கூட்டணி அமைத்தும் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தேவகவுடாவும், சித்தராமையாவும் ஒரே மேடையில் தோன்றினர். முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர், காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறும் போது, எங்களது கூட்டணி, காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணியின் வெற்றியை குறிக்கிறது. கர்நாடகாவில் இந்தக் கூட்டணி முதல்வர் குமாரசாமி தலைமையில் 5 ஆண்டுகள் நீடிக்கும். மக்களவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் ஒன்றாக தேர்தலை சந்திக்கும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்றார். இந்த சந்திப்பு குறித்து முதல்வர் குமாரசாமி கூறும் போது, இந்த சந்திப்பால் அடிமட்ட அளவில் காங்கிரஸ் - ம.ஜ.த. தொண்டர்களும் உற்சாகமாகி இருக்கின்றனர். இதன்மூலம் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து