எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : ஊழல் என்று சொன்னாலே தி.மு.க.தான். தி.மு.க. என்றாலே ஊழல்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீரபாண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது,
மருத்துவத் துறையிலே தமிழகம் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. அரசு சார்பில் பல்வேறு மருத்துவமனைகள் துவக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சேலத்தில் கூட, மகப்பேறு மருத்துவமனை துவக்கியிருக்கிறோம், அது பச்சிளங் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம். தாய்மார்கள் பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அதிக செலவாகும், எனவே அவர்களுக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நவீன முறையில் மகப்பேறு மருத்துவமனை அம்மா கட்டிக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அம்மாவினுடைய ஆட்சியில்தான் துவக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கையும் இல்லாத ஒருவருக்கு, இறந்தவரின் உடலிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து பொருத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மருத்துவமனையிலும் இதுபோன்று செய்தது கிடையாது.
பிரசவ காலத்தில் தாய்மார்களின் இறப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது, பிறக்கின்ற குழந்தைகளின் இறப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது. கருவிலே வளர்கின்ற குழந்தை நலமாக வாழவேண்டும் என்பதற்காக கருவுற்ற தாய்மார்களுக்கு 18000 ஆக அம்மா அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. வேளாண்மைத் துறையில் தொடர்ந்து க்ரிஷ் கர்மாண் விருதை பெற்றுக் கொண்டிருக்கின்றோம். நீர் மேலாண்மைப் படுத்தவேண்டும் என்பதற்காக எங்கெங்கெல்லாம் நீர் கிடைக்கின்றதோ அதையெல்லாம் சேமித்து வைத்து நிலத்தடி நீரை உயரச் செய்வதற்காக ஒடை மற்றும் நதிகளிலே தடுப்பணை கட்டுவதற்கு தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எங்கெங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கின்றதோ, அதையெல்லாம் ஆய்வு செய்து, அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்கியிருக்கின்றோம். அதன் அடிப்படையிலே, நம்முடைய வீரபாண்டிக்கு கூட ஒரு கூட்டுக்குடிநீர் திட்டத்தை புதிதாக உருவாக்கியிருக்கின்றோம். அந்தத் திட்டம் நிறைவேறுகின்ற பொழுது, வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்தனை மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் வழங்குவதற்கு அம்மாவினுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்படும், அதற்காக புதிய திட்டத்தை அம்மாவினுடைய அரசு உருவாக்க இருக்கின்றது.
குடிமராமத்து திட்டத்தின் மூலமாக, முதல்கட்டமாக, 100 கோடி ஒதுக்கி 1519 ஏரிகளை தூர்வாருவதை பரிட்சார்த்த முறையில் மேற்கொண்டோம். ஆங்காங்கே ஏரிகள் குளங்களில் இருக்கின்ற வண்டல்மண்ணை விவசாயத்திற்கு எருவாக பயன்படுத்துவதற்காக இலவசமாக அம்மாவின் அரசு தருகின்றது. இதனால் ஏரிகள், குளங்கள் ஆழமாகின்றது. பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஏரிகள், குளங்களில் அதிக அளவில் சேமித்து வைத்து, நிலத்தடி நீர் உயர்வதற்கு அம்மாவினுடைய அரசு செயல்படுத்திய திட்டம் குடிமராமத்து திட்டம். மேலும் விவசாயிகள் இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென்று அளித்த கோரிக்கையை ஏற்று, இரண்டாம் கட்டமாக 328 கோடியில் 1511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, படிப்படியாக தமிழகத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும்.
எப்பொழுது பார்த்தாலும் எதிர்க்கட்சித்தலைவர், தி.மு.க.-வின் தலைவர் ஸ்டாலின் ஊழல், ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க., தி.மு.க. என்றாலே ஊழல், அதற்கென்றே துவங்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. ஏற்கனவே, சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு சொல்லியிருக்கிறது, விஞ்ஞான முறையில் ஊழல் செய்கின்ற ஒரு அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்று ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. பூச்சி மருந்திலே ஊழல், அரிசி பேர ஊழல், வீராணம் ஊழல், வீராணம் கூட்டுக்குடிநீர் திட்டம், அந்தப் பைப்பில் குடியிருந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்ற ஊழலுக்கு இந்த பைப்பே சான்று. திருக்கழுக்குன்றத்தில், வீராணத்தில் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 1000 பைப் அப்படியே கிடக்கிறது. அந்த வீராண ஊழலில் டெண்டர் எடுத்த சத்யநாராயணன் இறந்தே போய் விட்டார். ஆகவே, உங்களுடைய ஆட்சியில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றது. அந்த ஊழலால் மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகினார்கள். இந்தக் கூட்டுக்குடிநீர் பாதிக்கப்பட்ட காரணத்தினாலே, சென்னைக்கு வர வேண்டிய குடிநீர் கிடைக்கவில்லை. கருணாநிதி கொண்டு வந்த வீராணம் திட்டம் ஊழல் நிறைந்த திட்டமாக ஆனதால், அந்தத் திட்டம் இடையிலே நிறுத்தப்பட்டது. ஆகவே, அம்மா, புதிய வீராணம் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, இன்றைக்கு சென்னை மாவட்ட மக்களுக்கு தங்குதடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கின்ற காட்சியை அம்மாவினுடைய ஆட்சியில்தான் பார்க்க முடியும்.
இன்றைக்கு உச்சநீதிமன்றம் அளித்த கருத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு இருந்தால், அந்த வழக்கை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விட்டது. முதன்முதலில் விசாரணை, ஸ்டாலின் மீதுதான் வந்தது. இன்றைக்கு, தி.மு.க.-வில்தான் கிட்டத்திட்ட 10, 11 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது. அத்தனை வழக்குகளையும் இந்த தனி நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றது, அப்படி வருகின்ற பொழுது நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எங்கள் மீது வேண்டுமென்றே குறை சொல்வதற்குக் காரணம், இங்கே இருக்கின்ற வழக்குகளெல்லாம் அங்கே போகப் போகிறது. அப்பொழுது தினந்தோறும் பத்திரிகையில் வரும், தி.மு.க.-விற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். அந்த கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்பதற்காக, எங்கள் மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஊழலும் செய்யாத அம்மாவின் அரசு மீது, பல்வேறு துறைகள் மீது இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டு சொல்வதற்குக் காரணம், தி.மு.க. ஆட்சி இருந்தபொழுது அவர்களுடைய அமைச்சர்களெல்லாம், பல்வேறு தவறு செய்த காரணத்தினால் அவர்கள் மீது ஆங்காங்கே நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அத்தனை வழக்குகளும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்த நீதிமன்றத்தில் மாறுகின்றபொழுது, அந்த வழக்குகளெல்லாம் நடைபெறும், அப்பொழுது என்ன தீர்ப்பு வரும் என்பதை எண்ணித்தான், நம் மீது தவறான குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில், அரியானூரில் 45 கோடி ரூபாயில் உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டு விட்டது. மகுடஞ்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை இருக்கின்ற காரணத்தினாலே விபத்து ஏற்படாமல் தடுக்க, அங்கே உயர்மட்டப் பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அங்கே ஒரு உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு அம்மாவினுடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது உங்களுடைய அரசு, இது மக்களுடைய அரசு, மக்களின் தேவைகளை செய்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு. இன்றைக்கு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய முன்னேற்றம் ஒன்றுதான் அம்மாவினுடைய அரசின் லட்சியம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.