எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தமிழகத்திலே எந்த காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று வீரபாண்டியில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது,
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, இந்தக் கட்சி இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டார் தி.மு.க.-வைச் சேர்ந்த அப்போதைய தலைவர். அம்மா துணிந்து நின்று, தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து, மீண்டும் பிரிந்த கழகத்தை ஒன்றாக இணைத்து, எம்.ஜி.ஆர். கண்ட கனவை அம்மா நனவாக்கினார். எம்.ஜி.ஆர் இந்த கழகத்தை தோற்றுவிக்கும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தினால் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்தார், எவ்வளவோ சோதனைகளையெல்லாம் தாங்கினார். அத்தனையும் தாண்டித்தான் 11 ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்தார். அவரது மறைவிற்கு பிறகு அம்மாவும், எம்.ஜி.ஆர். வழியிலே நின்று கழகத்தை கட்டிக் காக்கும் போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிரிகளால் எவ்வளவோ பிரச்சினைகளையும், சோதனைகளையும் சந்தித்தார். அத்தனையையும் மக்கள் துணை கொண்டு, கழகத்தினுடைய தொண்டர்கள், நிர்வாகிகளின் துணை கொண்டு கிட்டத்தட்ட ஆறு முறை தமிழகத்தினுடைய முதலமைச்சராக பதினைந்தரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி தந்த தலைவி அம்மா. இந்தியாவிலேயே எந்த கட்சித் தலைவரும் இவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது. அந்த துன்பத்தையெல்லாம் தாங்கிக் கொண்டு, நமக்கு வாழ்வைத் தந்தவர் அம்மா. ஏனென்று சொன்னால், எம்.ஜி.ஆருக்கும், அம்மாவிற்கும் வாரிசுகள் கிடையாது, நாம்தான் வாரிசு. தி.மு.க.வைப் போல கழகத்தில் குடும்ப அரசியல் கிடையாது. யார் சிறப்பாக செயல்படுகின்றார், யார் இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றார், யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கின்றது, யார் மக்களுக்கு சேவை செய்கின்றார்கள் என்று கண்டறிந்து இருபெரும் தலைவர்களும் அவர்களுக்கு பதவி வழங்கினார்கள்.
அந்த இருபெரும் தலைவர்களின் ஆட்சிக் காலத்திலேதான், ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தவர் கூட, ஒரு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஊராட்சி மன்ற தலைவராக, மாவட்டக் குழு தலைவராக, இன்னும் பல்வேறு அமைப்புகளின் தலைவராக வருவதற்கு அடித்தளமாக விளங்கியவர்கள் இருபெரும் தலைவர்கள். ஏனென்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இது போன்று பார்க்க முடியாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் ஜனநாயக இயக்கம், ஜனநாயக கட்சி, இந்தியாவிலேயே ஒரு சாதாரண தொண்டன்கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. ஆகவே, யாராலும் இந்த கட்சியை அழிக்க முடியாது. யாரெல்லாமோ முயன்று பார்த்தார்கள், அந்த முயற்சியையெல்லாம் முறியடித்தற்கு காரணம் தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன். இன்று நான் முதலமைச்சராக இருந்தால்கூட, உங்கள் முன் தொண்டனாகத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எந்த இயக்கத்தில் தொண்டர்கள் இணைந்திருக்கின்றார்களோ, அந்த இயக்கம் வலுமையாக இருக்கும் என்பதை இருபெரும் தலைவர்கள் நமக்கு சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுரையை கேட்டுத்தான் நாமும் நடந்து கொண்டிருக்கின்றோம். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களைக் கொண்ட ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். அம்மா இருக்கும் பொழுது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தார்கள், இதுவரைக்கும் ஒரு கோடியே 20 லட்சம் தொண்டர்கள் சேர்ந்து விட்டார்கள், இன்னும் 30 லட்சம் தொண்டர்கள் சேர இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்கள் இருக்கின்ற ஒரே இயக்கம் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். அதுவும், இளைஞர்கள் நிறைந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான்.
அப்படி இருபெரும் தலைவர்களின் வழியிலே இன்றைக்கு ஆட்சியும் கட்சியும் சிறப்பான முறையிலே பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இதையெல்லாம் பொறுக்கமுடியாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார், இப்பொழுது தி.மு.க.-வின் தலைவராகவும் இருக்கிறார். உங்களுடைய அப்பா கருணாநிதி இருக்கும்பொழுதே அண்ணா தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியவில்லை, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம். அவர் இருக்கும் பொழுதே இந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்கள் எவ்வளவு பிரச்சினையை உண்டாக்கினார்கள் என்பது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தெரியும். அத்தனையையும் தாக்குப் பிடித்துத்தான் இன்றைக்கு தமிழகத்தில் 28 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். நீங்கள் எங்களை விரட்ட பார்க்கிறீர்கள், ஒன்றும் நடக்காது. தோட்டத்தில் சொல்வார்கள், சொந்த உழைப்பு வலிமையாக இருக்கும். ஆள் வைத்து செய்வது சரியாக இருக்காது, அதுபோல, அது ஆள் வைத்து செய்கிற கட்சி. இது சொந்தமாக உழைக்கின்ற கட்சி, இந்தக் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது.
அதுமட்டுமல்ல, எப்பொழுது பார்த்தாலும் இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எதையும் செய்யவில்லை, மக்கள் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்று ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை அம்மா கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு இந்திய துணைக் கண்டத்திலேயே அதிக திட்டங்களை கொண்டு வந்த ஒரே தலைவி அம்மாதான். இன்று அவர் வழியிலே தான் அம்மா அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்திலே அம்மா வாக்குறுதி அளித்தார்கள். நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தால் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவேன் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடியே 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் நடைமுறைப்படுத்தியது கிடையாது.
இன்றைக்கு அம்மாவின் ஆட்சியில் கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 36 லட்சம் நபர்களுக்கு மடிக்கணினி கொடுத்திருக்கிறோம், இன்னும் 15 லட்சம் நபர்களுக்கு கொடுக்க இருக்கிறோம், கிட்டத்தட்ட 51 லட்சம் நபர்களுக்கு கொடுத்து விடுவோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் கிடையாது. இந்த விஞ்ஞான காலத்தில் அறிவுபூர்வமான கல்வியைக் கொடுத்தால்தான் உலக அளவில் நம்முடைய மாணவ, மாணவிகள் போட்டி போட இயலும்.
தி.மு.க.வினர் தினந்தோறும் பொய் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்குத்தான் மடிக்கணினியை கொடுத்திருக்கிறோம். உங்களைப் போல் ஏமாற்றுப் பேர்வழிகள் இனிமேல் தமிழகத்திலே எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.