முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திலே எந்தக் காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : தமிழகத்திலே எந்த காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று வீரபாண்டியில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது, 

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, இந்தக் கட்சி இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டார் தி.மு.க.-வைச் சேர்ந்த அப்போதைய தலைவர். அம்மா துணிந்து நின்று, தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து, மீண்டும் பிரிந்த கழகத்தை ஒன்றாக இணைத்து, எம்.ஜி.ஆர். கண்ட கனவை அம்மா நனவாக்கினார். எம்.ஜி.ஆர் இந்த கழகத்தை தோற்றுவிக்கும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தினால் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்தார், எவ்வளவோ சோதனைகளையெல்லாம் தாங்கினார். அத்தனையும் தாண்டித்தான் 11 ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்தார்.  அவரது மறைவிற்கு பிறகு அம்மாவும்,  எம்.ஜி.ஆர். வழியிலே நின்று கழகத்தை கட்டிக் காக்கும் போது,  திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிரிகளால் எவ்வளவோ பிரச்சினைகளையும், சோதனைகளையும் சந்தித்தார். அத்தனையையும் மக்கள் துணை கொண்டு, கழகத்தினுடைய தொண்டர்கள், நிர்வாகிகளின் துணை கொண்டு கிட்டத்தட்ட ஆறு முறை தமிழகத்தினுடைய முதலமைச்சராக பதினைந்தரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி தந்த தலைவி அம்மா. இந்தியாவிலேயே எந்த கட்சித் தலைவரும் இவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது.  அந்த துன்பத்தையெல்லாம் தாங்கிக் கொண்டு, நமக்கு வாழ்வைத் தந்தவர்  அம்மா. ஏனென்று சொன்னால், எம்.ஜி.ஆருக்கும், அம்மாவிற்கும் வாரிசுகள் கிடையாது, நாம்தான் வாரிசு. தி.மு.க.வைப் போல கழகத்தில் குடும்ப அரசியல் கிடையாது. யார் சிறப்பாக செயல்படுகின்றார், யார் இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றார், யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கின்றது, யார் மக்களுக்கு சேவை செய்கின்றார்கள் என்று கண்டறிந்து இருபெரும் தலைவர்களும் அவர்களுக்கு பதவி வழங்கினார்கள். 

அந்த இருபெரும் தலைவர்களின் ஆட்சிக் காலத்திலேதான், ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தவர் கூட, ஒரு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஊராட்சி மன்ற தலைவராக, மாவட்டக் குழு தலைவராக, இன்னும் பல்வேறு அமைப்புகளின் தலைவராக வருவதற்கு அடித்தளமாக விளங்கியவர்கள் இருபெரும் தலைவர்கள்.  ஏனென்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இது போன்று பார்க்க முடியாது.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் ஜனநாயக இயக்கம், ஜனநாயக கட்சி, இந்தியாவிலேயே ஒரு சாதாரண தொண்டன்கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி.  ஆகவே, யாராலும் இந்த கட்சியை அழிக்க முடியாது. யாரெல்லாமோ முயன்று பார்த்தார்கள், அந்த முயற்சியையெல்லாம் முறியடித்தற்கு  காரணம்  தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.  இன்று நான் முதலமைச்சராக இருந்தால்கூட, உங்கள் முன் தொண்டனாகத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.  எந்த இயக்கத்தில் தொண்டர்கள் இணைந்திருக்கின்றார்களோ, அந்த இயக்கம் வலுமையாக இருக்கும் என்பதை இருபெரும் தலைவர்கள் நமக்கு சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்.  அவர்களுடைய அறிவுரையை கேட்டுத்தான் நாமும் நடந்து கொண்டிருக்கின்றோம்.  இந்தியாவிலேயே அதிக தொண்டர்களைக் கொண்ட ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.  அம்மா இருக்கும் பொழுது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தார்கள், இதுவரைக்கும் ஒரு கோடியே 20 லட்சம் தொண்டர்கள் சேர்ந்து விட்டார்கள், இன்னும் 30 லட்சம் தொண்டர்கள் சேர இருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்கள் இருக்கின்ற ஒரே இயக்கம் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான்.  அதுவும், இளைஞர்கள் நிறைந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். 

அப்படி இருபெரும் தலைவர்களின் வழியிலே இன்றைக்கு ஆட்சியும் கட்சியும் சிறப்பான முறையிலே பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது.  இதையெல்லாம் பொறுக்கமுடியாத  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார், இப்பொழுது தி.மு.க.-வின் தலைவராகவும் இருக்கிறார்.  உங்களுடைய அப்பா கருணாநிதி இருக்கும்பொழுதே அண்ணா தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியவில்லை, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம்.  அவர் இருக்கும் பொழுதே இந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்கள் எவ்வளவு பிரச்சினையை உண்டாக்கினார்கள் என்பது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தெரியும். அத்தனையையும் தாக்குப் பிடித்துத்தான் இன்றைக்கு தமிழகத்தில் 28 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே இயக்கம்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான்.   நீங்கள் எங்களை விரட்ட பார்க்கிறீர்கள், ஒன்றும் நடக்காது. தோட்டத்தில் சொல்வார்கள், சொந்த உழைப்பு வலிமையாக இருக்கும். ஆள் வைத்து செய்வது சரியாக இருக்காது, அதுபோல, அது ஆள் வைத்து செய்கிற கட்சி.  இது சொந்தமாக உழைக்கின்ற கட்சி, இந்தக் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது.

அதுமட்டுமல்ல, எப்பொழுது பார்த்தாலும்  இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எதையும் செய்யவில்லை, மக்கள் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்று ஸ்டாலின் பேசி வருகிறார்.  இந்த ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை அம்மா கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு இந்திய துணைக் கண்டத்திலேயே அதிக திட்டங்களை கொண்டு வந்த ஒரே தலைவி அம்மாதான்.  இன்று அவர் வழியிலே தான் அம்மா அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  தேர்தல் நேரத்திலே அம்மா வாக்குறுதி அளித்தார்கள்.  நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தால் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவேன் என்று சொன்னார்கள்.  கிட்டத்தட்ட ஒரு கோடியே 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் நடைமுறைப்படுத்தியது கிடையாது. 

இன்றைக்கு அம்மாவின் ஆட்சியில் கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 36 லட்சம் நபர்களுக்கு மடிக்கணினி கொடுத்திருக்கிறோம், இன்னும் 15 லட்சம் நபர்களுக்கு கொடுக்க இருக்கிறோம், கிட்டத்தட்ட 51 லட்சம் நபர்களுக்கு கொடுத்து விடுவோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் கிடையாது. இந்த விஞ்ஞான காலத்தில் அறிவுபூர்வமான கல்வியைக் கொடுத்தால்தான் உலக அளவில் நம்முடைய மாணவ, மாணவிகள் போட்டி போட இயலும்.

தி.மு.க.வினர் தினந்தோறும் பொய் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.  அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்குத்தான் மடிக்கணினியை கொடுத்திருக்கிறோம்.  உங்களைப் போல் ஏமாற்றுப் பேர்வழிகள் இனிமேல் தமிழகத்திலே எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து