எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தமிழகத்திலே எந்த காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று வீரபாண்டியில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது,
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, இந்தக் கட்சி இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டார் தி.மு.க.-வைச் சேர்ந்த அப்போதைய தலைவர். அம்மா துணிந்து நின்று, தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து, மீண்டும் பிரிந்த கழகத்தை ஒன்றாக இணைத்து, எம்.ஜி.ஆர். கண்ட கனவை அம்மா நனவாக்கினார். எம்.ஜி.ஆர் இந்த கழகத்தை தோற்றுவிக்கும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தினால் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்தார், எவ்வளவோ சோதனைகளையெல்லாம் தாங்கினார். அத்தனையும் தாண்டித்தான் 11 ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்தார். அவரது மறைவிற்கு பிறகு அம்மாவும், எம்.ஜி.ஆர். வழியிலே நின்று கழகத்தை கட்டிக் காக்கும் போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிரிகளால் எவ்வளவோ பிரச்சினைகளையும், சோதனைகளையும் சந்தித்தார். அத்தனையையும் மக்கள் துணை கொண்டு, கழகத்தினுடைய தொண்டர்கள், நிர்வாகிகளின் துணை கொண்டு கிட்டத்தட்ட ஆறு முறை தமிழகத்தினுடைய முதலமைச்சராக பதினைந்தரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி தந்த தலைவி அம்மா. இந்தியாவிலேயே எந்த கட்சித் தலைவரும் இவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது. அந்த துன்பத்தையெல்லாம் தாங்கிக் கொண்டு, நமக்கு வாழ்வைத் தந்தவர் அம்மா. ஏனென்று சொன்னால், எம்.ஜி.ஆருக்கும், அம்மாவிற்கும் வாரிசுகள் கிடையாது, நாம்தான் வாரிசு. தி.மு.க.வைப் போல கழகத்தில் குடும்ப அரசியல் கிடையாது. யார் சிறப்பாக செயல்படுகின்றார், யார் இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றார், யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கின்றது, யார் மக்களுக்கு சேவை செய்கின்றார்கள் என்று கண்டறிந்து இருபெரும் தலைவர்களும் அவர்களுக்கு பதவி வழங்கினார்கள்.
அந்த இருபெரும் தலைவர்களின் ஆட்சிக் காலத்திலேதான், ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தவர் கூட, ஒரு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஊராட்சி மன்ற தலைவராக, மாவட்டக் குழு தலைவராக, இன்னும் பல்வேறு அமைப்புகளின் தலைவராக வருவதற்கு அடித்தளமாக விளங்கியவர்கள் இருபெரும் தலைவர்கள். ஏனென்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இது போன்று பார்க்க முடியாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் ஜனநாயக இயக்கம், ஜனநாயக கட்சி, இந்தியாவிலேயே ஒரு சாதாரண தொண்டன்கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. ஆகவே, யாராலும் இந்த கட்சியை அழிக்க முடியாது. யாரெல்லாமோ முயன்று பார்த்தார்கள், அந்த முயற்சியையெல்லாம் முறியடித்தற்கு காரணம் தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன். இன்று நான் முதலமைச்சராக இருந்தால்கூட, உங்கள் முன் தொண்டனாகத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எந்த இயக்கத்தில் தொண்டர்கள் இணைந்திருக்கின்றார்களோ, அந்த இயக்கம் வலுமையாக இருக்கும் என்பதை இருபெரும் தலைவர்கள் நமக்கு சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுரையை கேட்டுத்தான் நாமும் நடந்து கொண்டிருக்கின்றோம். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களைக் கொண்ட ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். அம்மா இருக்கும் பொழுது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தார்கள், இதுவரைக்கும் ஒரு கோடியே 20 லட்சம் தொண்டர்கள் சேர்ந்து விட்டார்கள், இன்னும் 30 லட்சம் தொண்டர்கள் சேர இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்கள் இருக்கின்ற ஒரே இயக்கம் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். அதுவும், இளைஞர்கள் நிறைந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான்.
அப்படி இருபெரும் தலைவர்களின் வழியிலே இன்றைக்கு ஆட்சியும் கட்சியும் சிறப்பான முறையிலே பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இதையெல்லாம் பொறுக்கமுடியாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார், இப்பொழுது தி.மு.க.-வின் தலைவராகவும் இருக்கிறார். உங்களுடைய அப்பா கருணாநிதி இருக்கும்பொழுதே அண்ணா தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியவில்லை, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம். அவர் இருக்கும் பொழுதே இந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்கள் எவ்வளவு பிரச்சினையை உண்டாக்கினார்கள் என்பது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தெரியும். அத்தனையையும் தாக்குப் பிடித்துத்தான் இன்றைக்கு தமிழகத்தில் 28 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். நீங்கள் எங்களை விரட்ட பார்க்கிறீர்கள், ஒன்றும் நடக்காது. தோட்டத்தில் சொல்வார்கள், சொந்த உழைப்பு வலிமையாக இருக்கும். ஆள் வைத்து செய்வது சரியாக இருக்காது, அதுபோல, அது ஆள் வைத்து செய்கிற கட்சி. இது சொந்தமாக உழைக்கின்ற கட்சி, இந்தக் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது.
அதுமட்டுமல்ல, எப்பொழுது பார்த்தாலும் இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எதையும் செய்யவில்லை, மக்கள் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்று ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை அம்மா கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு இந்திய துணைக் கண்டத்திலேயே அதிக திட்டங்களை கொண்டு வந்த ஒரே தலைவி அம்மாதான். இன்று அவர் வழியிலே தான் அம்மா அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்திலே அம்மா வாக்குறுதி அளித்தார்கள். நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தால் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவேன் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடியே 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் நடைமுறைப்படுத்தியது கிடையாது.
இன்றைக்கு அம்மாவின் ஆட்சியில் கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 36 லட்சம் நபர்களுக்கு மடிக்கணினி கொடுத்திருக்கிறோம், இன்னும் 15 லட்சம் நபர்களுக்கு கொடுக்க இருக்கிறோம், கிட்டத்தட்ட 51 லட்சம் நபர்களுக்கு கொடுத்து விடுவோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் கிடையாது. இந்த விஞ்ஞான காலத்தில் அறிவுபூர்வமான கல்வியைக் கொடுத்தால்தான் உலக அளவில் நம்முடைய மாணவ, மாணவிகள் போட்டி போட இயலும்.
தி.மு.க.வினர் தினந்தோறும் பொய் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்குத்தான் மடிக்கணினியை கொடுத்திருக்கிறோம். உங்களைப் போல் ஏமாற்றுப் பேர்வழிகள் இனிமேல் தமிழகத்திலே எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.