முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 2019: தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி,இந்தியன் ப்ரீமியர் லீக் ஐ.பி.எல். 2019 போட்டிக்காக தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்கை பெங்களூரு அணியிடம் இருந்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

பி.சி.சி.ஐ.-க்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் வகையில் ஐ.பி.எல் போட்டிகள் கடந்த 2009-முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் விளையாடும் முன்னணி வீரர்களை அதிக விலை கொடுத்து பல்வேறு அணிகள் வாங்குகின்றன.தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டி காக்கை கடந்த 2018 ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.2.8 கோடி அளித்து வாங்கியது ஆர்.சி.பி.. தற்போது அதே விலைக்கு டி காக்கை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. ஆர்.சி.பி. அணி இதற்காக டி காக்கை விடுவித்துள்ளது என ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த பரிமாற்றத்துக்காக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிர் ரஹ்மான், (ரூ.2.2 கோடி), இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா (ரூ.50 லட்சம்) ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் விடுவித்துள்ளது. எவின் லெவிஸுடன் இணைந்து டி காக் ஆடுவது மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை தரும். டி காக் ஏற்கெனவே டெல்லி, ஐதராபாத் அணிகள் பங்கேற்று விளையாடியுள்ளார். மொத்தம் 34 ஐபிஎல் ஆட்டங்களில் ஒரு சதம், 6 அரை சதங்களுடன் மொத்தம் 927 ரன்களை விளாசியுள்ளார் டிகாக்.நவம்பர் 15-கடைசி நாள்: ஐ.பி.எல். தொடர்பாக வீரர்களை பரிமாறிக் கொள்ளுதல், விடுவித்தல் போன்றவற்றுக்கு வரும் நவம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து