முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமால் உடல் எங்கே என்று தெரியவில்லை சவுதி தகவலால் சர்ச்சை

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல்,சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று சவுதி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கிசவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர்.இந்த நிலையில் இந்த கொலை குறித்து சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அதெல் அல் ஜுபைர் கூறுகையில், இந்த கொலை மிகப்பெரிய தவறான விஷயம். சவுதி இதில் மிகப் பெரிய தவறை செய்து விட்டது. இதனால் உலக அளவில் எங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அரசு காரணம் என்றும் சொல்ல முடியாது. அரசின் நேரடி உத்தரவின் பேரில் இந்த கொலை நடக்கவில்லை. இந்த கொலையை 18 பேர் கொண்ட குழு செய்துள்ளது. சிலர் தன்னிச்சையாக கொடுத்த உத்தரவின் பேரில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது. அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.மேலும், கொலை செய்யப்பட்ட ஜமாலின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அவரை எப்படி கொலை செய்தார்கள் என்றும் தெரியவில்லை.

அவரை கொன்று விட்டு எங்கே உடலை கொண்டு சென்றார்கள் என்று விசாரித்து வருகிறோம். சவுதிதான் இந்த கொலையை செய்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.இந்த நிலையில் ஜமால் உடலை காணவில்லை என்று சவுதி பொய் சொல்வதாக கூறப்படுகிறது. அவரை வைத்து பெரிய அரசியல் திட்டங்களை சவுதி தீட்டி இருக்கிறது. அதனால்தான் அவரது உடலை அளிக்க மறுக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து