முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான ராகேஷ் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியதாவது:ஆணின் திருமண வயது என்பது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வாக்குரிமையைச் செலுத்தவும், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் சேரவும் குறைந்த பட்ச வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, திருமணத்திற்கு மட்டும் ஏன் 21 ஆக இருக்க வேண்டும்? எனவே ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்தால் விசாரிக்கலாம்; ஆனால் இதை பொதுநல வழக்காக தாக்கல் செய்வது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், ராகேஷ் பாண்டேவுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து