முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம்பெண்ணுடன் பேசியதாக வெளியான ஆடியோ பின்னணியில் சசிகலா - தினகரன் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,இளம்பெண்ணிடம் நான் பேசியதாக ஆடியோ வெளியான பின்னணியில் சசிகலா - தினகரன் கும்பல் சதி இருப்பதாகவும் இது குறித்து புகார் அளித்து வழக்கு தொடர்வேன் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டார். அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் மீது நேற்று காலையிலிருந்தே சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவிய வண்ணம் இருந்தன. இது குறித்து அந்த பெண்ணிடம் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாக ஒரு உரையாடல் ஆடியோவும் வெளியானது. இதனால் அரசியல் வட்டாரங்கள் பெரும் பரபரப்படைந்தன.

இந்த நிலையில் இந்த வாட்ஸ் அப் பரவல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமறு:-என்னை நேரடியாக சந்திக்க திராணி இல்லாதவர்கள், ஆடியோவை போலியாக தயார் செய்துள்ளனர். அந்த போலி ஆடியோவை தயார் செய்து வெளியிட்டவர்கள் பின்னணியில் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் உள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். இதற்கு முன்பும் என்மேல் அவதூறு பரப்ப இது போன்ற முயற்சிகள் நடந்தன. சிறுநரிகள் கூட்டத்திற்கு அஞ்சுகிறவன் நான் அல்ல. டி.ஜெயகுமார் என்று உலகத்தில் நான் ஒருவன் தான் இருக்கிறேனா போலி ஆடியோ பின்னணியில் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக புகார் அளிப்பேன். வழக்கு தொடர்வேன். இவ்வாறு அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து