முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு பாக். பிரதமர் அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஜம்மு,காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே  நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சம்பவ இடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தின்படியும், காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா முன்வர வேண்டும். அதற்குச் சரியான தருணம் இதுதான் என்று அந்த கட்டுரைப் பதிவில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து