முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் யார் தலையீடும் இல்லாமல் அம்மா வழியில் தொடர்ந்து நல்லாட்சி நடைபெறுகிறது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு.

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -      திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அண்ணா.தி.மு.க ஒன்றியம், நகர கழகத்தின் சார்பாக கட்சியின் 47வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை எம்.ஜு.ஆர் திடலில் பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் வரவேற்புரையாற்றினார். நகர செயலாளர்கள் நிலக்கோட்டை சேகர், அம்மையநாயக்கனூர் தண்டபானி, தொகுதி செயலாளர் கனகதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறும்போது தமிழகத்தில் தர்மயூத்தம் எதற்காக நடைபெற்றது என்றால் ஒரு குடும்பத்தை வெளியேற்றிவிட்டு இரண்டாக பிரிந்து கிடைந்த கட்சியை ஒன்று சேர்பது தான் இந்த தர்மயூத்தம் தமிகத்தில் தற்போது அம்மாவின் ஆசியுடன் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் சூழ்ச்சி செய்து வருகிறது. அவர் பகல் கனவு பலிக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் இடைதேர்தலில் அனைத்து தேர்தலிலுமே அம்மாவின் ஆசியுடன் அனைத்து தொகுதியும் கைப்பற்றுவோம் ஊழலுக்கு என்று அடித்தளம் இட்ட கட்சி தி.மு.க. தி.மு.க.வும், காங்கிரசும் தொடர்ந்து 10ஆண்டுகள் ஆட்சியில் இருந்து பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளானதால் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது. தி.மு.க தலைமை செயலகம் கட்டியது சம்பந்தமாக பல்வேறு ஊழல்கள் உள்ளன. இது நீதி மன்றத்தில் வழக்கு பதியப்பட்டு அதற்கு அவர்கள் இன்று வரை தடையானை பெற்று வழக்கை நடத்தவிடாமல் இருக்கிறார்கள். ஒருவர் மீது வழக்கு போடவேண்டும் என்றால் தகுந்த ஆதாரத்துடன் வழக்கு தொடர வேண்டும். குற்றங்கள் நிருபிக்கப்பட்டால் தான் குற்றவாளி என கருதப்படும் ஆனால் அ.தி.மு.க அரசு மீதும், முக்கிய நிர்வாகிகள் மீதும் தேவையில்லாத குற்றசாட்டுகளை சுமத்தி மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது தி.மு.க அ.தி.மு.க.வை கருணாநீதியே அசைக்கமுடியவில்லை கத்துகுட்டி ஸ்டாலினால் ஒரு காலும் அசைக்க முடியாது என கூறினார். விழாவில் மாவட்ட செயலாளர் மருதராஜ், முன்னாள் ஆவின் சேர்மன் திவான்பாட்ஷா, நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு, ஜெயபால், வினோத்கண்ணா, நிலக்கோட்டை கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நாகராஜன், முன்னாள் எம்எல்ஏக்கர் வேணுகோபால், அன்பழகன், ஒன்றிய துனைச்செயலாளர் நல்லதம்பி, முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் சீனிவாசன், வத்தலக்குண்டு கவுன்சிலர் முத்துச்சாமி, கவிப்ராஜா, காசி, நிலக்கோட்டை வீட்டு வசதி கூட்டுறவு சங்க தலைவர் ராஜா நகரத்தினம், மற்றும் கழக முன்னோடிகள் சார்பு அணியினர் என பலர் கலந்துகொண்டனர். முடிவில் நிலக்கோட்டை அம்மா பேரவை நகர செலயாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து