எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்-மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 39 பயனாளிகளுக்கு ரூ.17.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், வேளாண் வளர்ச்சி (ம) விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் மற்றும் அனைத்துத்துறை திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மழை அளவு விபரம், அணைகள் மற்றும் கண்மாய்களில் நீர் இருப்பு விபரம், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் இருந்து கேட்டறிந்து பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது தெரிவித்ததாவது :-
அம்மா வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வறட்சி என்றாலும் சரி, வெள்ளம் என்றாலும் சரி மக்களுக்காக அனைத்து தேவைகளையும் உரிய நேரத்தில் வழங்கி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 811.70மி.மீ சராசரி மழையளவில் தற்போது வரை 406.87 மி.மீ மழை பெய்துள்ளது. மழைநீரை சேகரிப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் அனைத்துத் துறை அலுவலர்களும் எடுத்துரைக்க வேண்டும். .
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் 25,000 எக்டேர் பரப்பளவில் நெல் பயிரும், 45,000 எக்டேர் பரப்பளவில் சிறுதானிய பயிர்களும், 13,000 எக்டேர் பரப்பளவில் பயிறு வகைகளும், 21,000 எக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரும் ஆக மொத்தம் 1,04,000 எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் 48 உழவர் உற்பத்தியாhள் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு ரூ.5,00,000 வீதம் சுழல்நிதி வழங்கப்பட்டு பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறையின் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் மீன் குஞ்சுகள் வளர்த்து எடுத்தல் திட்டத்தில் ரூ.15 லட்சத்திற்கு இலக்கீடு பெறப்பட்டு பிளவக்கல் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் 3லட்சம் விரலிகள் தற்போது விநியோகம் செய்ய தயாராக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் நகராட்சிக்கு ரூ.197.79 கோடி மதிப்பீட்டிலும், சிவகாசி நகராட்சிக்கு ரூ.117.34 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் திருத்தங்கல் நகராட்சிக்கு ரூ.88.91 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.404.04 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 755 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் (சீவலப்பேரி தலைமையிடம்) திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்து, தற்போது மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்படவுள்ளது.
பொதுப்பணித்துறையின் மூலமாக கட்டப்பட்டு வரும் வெம்பக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம், மற்றும் பள்ளிக்கட்டிடங்கள் என நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து கட்டிடப்பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப் பெற வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும்; தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவ அலுவலர்கள் தொடர்ந்து பணயில் இருக்க வேண்டும்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 29 பயனாளிகளுக்கு தலா ரூ.58,840- வீதம் ரூ.17,06,360 மதிப்பிலான விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 10 பயனாளிகளுக்கு ரூ.4170 வீதம் ரூ.41,700 மதிப்பிலான மோட்டர் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் ரூ.17,48,060 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் திருவில்லிபுத்தூர் வட்டம், அழகுதேவேந்திராபுரம் பரிசுத்த லூகா ஆலயம் மற்றும் சாத்தூர் வட்டம் ஒ.மேட்டுப்பட்டி, குழந்தை இயேசு ஆலயம் ஆகிய கிறித்தவ தேவாலயங்களுக்கு பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிக்காக ரூ.2,77,500 மதிப்பிலான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. திடீர் உத்தரவு
17 Apr 2024மும்பை : டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. கட்டளை போட்டுள்ளது.
சிக்கலாகவே...
-
பாரீஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது
17 Apr 2024பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஓட்டம் தொடங்கியது.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.