முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிப்பு புகார்: ரொனால்டோ கருத்து

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் புகழ் பெற்ற வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 34).  இவர் மீது கேத்தரின் மயோர்கா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில், கடந்த 2009ம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் ஓட்டல் ஒன்றின் அறையில் ரொனால்டோ தன்னை கற்பழித்தார் என கூறியுள்ளார்.  நான் வேண்டாம் என தொடர்ச்சியாக அலறினேன் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு ரொனால்டோ அளித்துள்ள பேட்டியில், கால்பந்து ஆடும்பொழுதும், பொது வாழ்க்கையிலும் நான் 100 சதவீதம் எடுத்துக்காட்டாக இருக்கிறேன்.  இது எனக்கு தெரியும்.  அதனால் நான் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனிதன். ஒரு சிறந்த அணியில் விளையாடுவதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என கூறினார். நிச்சயம், உண்மை முதல் இடத்தில் வந்து எப்பொழுதும் நிற்கும்.  அதனால் நலமுடன் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து