முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் தென்மண்டல பூப்பந்தாட்டப் போட்டிகள் துவக்கம்

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - இந்தியாவின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகிய 42வது தென்மண்டல  பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் மற்றும் 6வது சம்மேளன கோப்பையினை தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
தொடக்க விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சௌந்தர்ராஜன்,  பூப்பந்தாட்டக் கழக பொதுச் செயலாளர் எழிலரசன், மாநில துணைத்தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன், கல்லூரியின் புரோ சேர்மன் ஆர்.எஸ்.கே.ரகுராம் ஆகியோர் தலைமை வகித்தனர். 42வது தென்மண்டல கோப்பை போட்டியில் 12 தகுதி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேரந்த அணியினர் பங்கேற்றனர். மேலும் கல்லூரியின் சேர்மன் தனலெட்சுமி அம்மாள்,  பூப்பந்தாட்ட கழக தலைவர் டாக்டர் நடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து