முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என தீர்ப்பு மதுரையில் மாநகர் - புறநகர் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பளித்தவுடன் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கவர்னரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற சபாநாயகர் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் 19 பேரில் ஒருவரான எஸ்.டி.கே. ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து விளக்கமளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து மீதமுள்ள 18 பேர் மீதும்  நடவடிக்கை எடுத்து சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார். அதை தொடர்ந்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இது தொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து இது தொடர்பான வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரணை முடிந்த நிலையில்  3-வது தனி நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்த தீர்ப்பு நேற்று காலை 10.30 மணியளவில் வழங்கப்பட்டது. அப்போது 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று அவர் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு அ.தி.மு.க.வினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்ற ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், பகுதி கழக செயலாளர்கள் கே.ஜெயவேல், அண்ணாநகர் முருகன் மற்றும் புதூர் அபுதாகீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பனகல் சாலையில் உள்ள அ.தி.மு.க.அலுவலகத்தின் முன்பு அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் துணை செயலாளர் சி.தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மேயர் கு.திரவியம், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், பகுதி கழக செயலாளர்கள் தளபதி மாரியப்பன், அண்ணாநகர் எம்.என்.முருகன், செ.பூமிபாலகன் மற்றும் கோட்டைசாமி,  கார்னர் பாஸ்கரன், எஸ்.எம்.டி.ரவி, தேவதாஸ், எல்லீஸ்நகர் இந்திரா, முனிச்சாலை சரவணன், ஜி.மணிகண்டன், பாவலர் ராமச்சந்திரன், மலைச்சாமி, கறிக்கடை முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து