முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மூதாட்டியை மகளுடன் சேர்த்து வைத்த வீரர்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

ஹசன்,கர்நாடக மாநிலம், ஹசன் நகரைச் சேர்ந்த வயதான பெண், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிலையில், அவரைக் கண்டுபிடித்து பி.எஸ்.எப். வீரர் ஒருவர் மகளுடன் சேர்த்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஹசன் தாலுகா மந்திஹனஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம்மா (70). இவரின் மகள் சுனந்தா. இவர் திருநங்கை. சுனந்தா பெங்களூரில் வசித்து வருவதால், அவ்வப்போது வந்து மந்திஹனஹல்லியில் உள்ள தனது தாய் ஜெயம்மாவை சந்தித்து விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் தேதியில் இருந்து ஜெயம்மாவைக் காணவில்லை.சுனந்தாவும் பல்வேறு இடங்களில் தனது தாயை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அசாம் மாநிலம், கரிம்கஞ் மாவட்டத்தில் உள்ள சுத்தார்கண்டி பகுதியில் ஜெயம்மா இருப்பதாகக் சமீபத்தில் மந்திஹனஹல்லி போலீஸ் நிலையத்தில் இருந்து சுனந்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 2 ஆண்டுகளுக்குப் பின் தனது தாயைச் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரையும் அசாம் எல்லைப் பாதுகாப்பு படையினர் சேர்த்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து அசாம் பி.எஸ்.எப். டி.ஐ.ஜி. நாயக் கூறுகையில், கரீம்கஞ்ச் மாவட்டம், சுத்தார்கண்டியில் பி.எஸ்.எப். வீரர்கள் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு வீரர் வயதான பெண் ஒருவர் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மூதாட்டியிடம் சென்று விவரங்களைக் கேட்ட போது அவர் பேசிய மொழி அவருக்குப் புரியவில்லை. இதையடுத்து, பி.எஸ்.எப். பிரிவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாஹில் ஜபிபுல்லா என்பவரை அழைத்து வந்து அந்த மூதாட்டியிடம் விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டோம். இதையடுத்து, அந்த மூதாட்டி பேசிய விவரங்களை வீடியோவாகப் பதிவு செய்து, அதைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தோம். இந்த வீடியோ வைரலான நிலையில், மந்திஹனஹல்லியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் பெண் காணாமல் போன ஜெயம்மா என்பதை அறிந்து, பெங்களூரில் வசிக்கும் அவரின் மகள் சுனந்தாவுக்கு கடந்த 20-ம் தேதி தகவல் கொடுத்தார்.இதையடுத்து, சுனந்தா தனது தாயைப் பார்க்க இங்கு வந்தார். 2 ஆண்டுகளுக்கு பின் காணாமல் போன தனது தாயை சந்தித்த மகிழ்ச்சியில் சுனந்தா அவரைக் கட்டித்தழுவி கண்ணீர் விட்டார். இதைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து