முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ் அமைப்பின் 4 நாள் உலக மாநாட்டை துவக்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியபோது,இந்தியாவில் குளிர்கால திருவிழாக்கள் வர தொடங்கி உள்ளன. இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால், மக்கள் சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைத்து பண்டிகைகளையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் கொண்டாட வேண்டும் என பொதுமக்களிடம் சமூக அமைப்புக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து