முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - சீனா இடையே அடுத்த மாதம் 21-வது சுற்று பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,எல்லைப் பகுதி சச்சரவுகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா - சீனா இடையேயான 21-வது சுற்று பேச்சுவார்த்தை சீனாவில் நவம்பர் 23 முதல் 25-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதில், இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவின் தரப்பில் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் தலைமையில் இருநாட்டு அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தை பெய்ஜிங் நகர் தவிர்த்து வேறு இடத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் கூறின.சீன அரசின் முதன்மை நிர்வாக குழு உறுப்பினராக வாங் யி இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்ற நிலையில், அவர் பங்கேற்கும் முதல்சுற்று பேச்சுவார்த்தை இதுவாகும். எல்லைப் பகுதி சச்சரவில் இந்தியா - சீனா இடையே தற்போது வரையில் உரிய தீர்வு எட்டப்படாத போதிலும், இதுவரையிலான 20 சுற்று பேச்சுவார்த்தைகளின் மூலமாக அதற்கான தீர்வை எட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டதாக இருதரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து