எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது.
புனேவில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருந்ததன. மொகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் தேவந்திர பிஷூ நீக்கப்பட்டு ஆல்ரவுண்டரான பேபியன் ஆலன் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சந்தர்பால் ஹேம்ராஜ், கெய்ரன் பொவல் ஜோடி சீரான தொடக்கம் கொடுத்தது. பும்ரா வீசிய 6-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் விளாசிய ஹேம்ராஜ் கடைசி பந்தையும் விளாச முயன்ற போது தோனியின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். 20 பந்துகளை சந்தித்த சந்தர்பால் ஹேம்ராஜ் 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஷாய் ஹோப் களமிறங்கினார். அடுத்த சில ஓவர்களில் கெய்ரன் பொவலையும் (21), பும்ரா வெளியேற்றினார். 145 கி.மீ. வேகத்தில் வீசப்பட்ட பந்தை பொவல் தொட முயன்ற போது முதல் சிலிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. வலதுபுறம் மின்னல் வேகத்தில் வந்த கேட்ச்சை ரோஹித் அற்புதமாக மடக்கினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய மார்லோன் சாமுவேல்ஸ் 17 பந்துகளில், 9 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஷாய் ஹோப்புடன் இணைந்த சிம்ரன் ஹெட்மையர் மட்டையை சுழற்றினார். யுவேந்திர சாஹல் வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தை ஷாய் ஹோப், மிட்விக்கெட் திசையை நோக்கி சிக்ஸர் விளாசினார். இதையடுத்து சாஹல் வீசிய 17 மற்றும் 19-வது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர் விளாசி மிரட்டினார் ஹெட்மையர். குல்தீப் யாதவ் புல்டாசாக வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸராக மாற்றி ஹெட்மையர் 3-வது பந்தில் தோனியின் மதிநுட்பத்தால் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
21 பந்துகளை சந்தித்த ஹெட் மையர், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் இணைந்து ஹெட்மையர் 6.2 ஓவர்களில் 56 ரன்கள் விளாசியிருந்தார். இதையடுத்து களமிறங்கிய ரூவன் பொவல் (4), குல்தீப் யாதவ் பந்தை முட்டு போட்டு விளாச முயன்றார். ஆனால் நன்கு சுழன்று வந்த பந்து மட்டை விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து ஷாய் ஹோப்புடன் இணைந்த கேப்டன் ஜேசன் ஹோல்டர் நிதானமாக பேட் செய்தார். சீராக ரன்கள் சேர்த்த ஷாய் ஹோப் 72 பந்துகளில் தனது 7-வது அரை சதத்தை கடந்தார்.
இதன் பின்னர் ரன் குவிக்கும் வேகத்தை அவர், அதிகரித்தார். கலீல் அகமது வீசிய 35 மற்றும் 37-வது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர் விளாசினார் ஷாய் ஹோப். குல்தீப் யாதவ் வீசிய 38-வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் லாங் ஆன் திசையில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார்.
சுமார் 15 ஓவர்கள் நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடியை புவனேஷ்வர் குமார் பிரித்தார். பேக் ஆப் லென்ந்த்தில் வீசப்பட்ட பந்தை ஜேசன் ஹோல்டர் லாங் ஆப் திசையில் தூக்கி அடித்த போது பதிலி வீரராக நின்ற ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. 39 பந்துகளை சந்தித்த ஜேசன் ஹோல்டர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.
6-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் இணைந்து ஜேசன் ஹோல்டர் 76 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஃபேபியன் ஆலன் களமிறங்கினார். 40 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 211 ரன்கள் எடுத்தது. வந்த வேகத்திலேயே அதிரடியாக விளையாட முயன்ற ஆலன் 5 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க அது, ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஆஷ்லே நர்ஷ் களமிறங்கினார்.
சிறப்பாக பேட் செய்து வந்த ஷாய் ஹோப் 113 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் யார்க்கர் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 43.5 ஓவர்களில் 227 ஆக இருந்தது.
கடைசி கட்டத்தில் ஆஷ்லே நர்ஷ், கேமார் ரோச் அதிரடியாக விளையாடினார்கள். ஆஷ்லே நர்ஷ் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசிய நிலையில் பும்ராவின் கடைசி ஓவரில் போல்டானார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. இதில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. கேமார் ரோச் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டனுடன் 35 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, யுவேந்திர சாஹல் ஆகியார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 284 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 47.4 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் சாமுவேல்ஸ் 3 விக்கெட்களும் ஜேசன் ஹோல்டர், மெக்காய், ஆஷ்லே நர்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.