முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்குப் பருவமழை நவ.1ல் தொடங்க சாதகமான சூழல் வானிலை ஆய்வு மையம் தகவல்

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா  நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, டிட்லி மற்றும் லூபன் புயல்கள் காரணமாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து