முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பதி ராயுடு கூறிய போதிலும் இரட்டை சதம் அடிப்பது குறித்து யோசிக்கவில்லை: ரோகித் சர்மா

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : 4-வது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் குறித்து தான் யோசிக்கவில்லை என்று 162 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

அபார ஆட்டம்...

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்க 377 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் (38), விராட் கோலி (16) ஆட்டமிழந்த நிலையில் ரோகித் சர்மா, அம்பதி ராயுடு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 137 பந்தில் 162 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா ஆட்டமிழக்கும்போது 37 பந்துகள் மீதம் இருந்தது. இதனால் ரோகித் சர்மா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்முனையில் இருந்த அம்பதி ராயுடும் இந்த கருத்தை கூறியுள்ளார். ஆனால் நான் இரட்டை சதம் குறித்து யோசிக்கவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

யோசிக்கவில்லை...

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘எதிர்முனையில் இருந்த அம்பதி ராயுடு என்னிடம், உங்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால், நான் எனது ஆட்டத்தில்தான் கவனம் செலுத்தி வந்தேன். இரட்டை சதம் குறித்து யோசிக்கவில்லை. நான் மூன்று இரட்டை சதம் அடித்துள்ளேன். அந்த மூன்றையும் அடிப்பேன் என்று நினைத்தது கூட கிடையாது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து