முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சை தாக்கிய யுது புயல்: 7 பேர் பலி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

மணிலா : பிலிப்பைன்ஸில் யுது புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து பிலிப்பைன்ஸின் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிலிப்பைன்ஸில் நேற்று முன்தினம் நான்கு மாகாணங்களில் யுது புயல் தாக்கியது. இதன் காரணமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. வடக்கு மலைப் பகுதியில் சேதம் அதிகமாக ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் 30 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸில் வீசிய மக்குட் புயலின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 70 பேர் பலியாகினர். இந்த நிலையில் மீண்டும் பிலிப்பைன்சை புயல் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து