எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் பசும்;பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 111-வது பிறந்த நாள் விழா மற்றும் 56-வது குருபூஜையினை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத்தி, அஞ்சல் துறையின் சார்பாக தேவர் திருமகனாரின் முழு உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் அட்டையினை வெளியிட, அதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பெற்றுக்கொண்டார். பின்பு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக மொத்தம் 414 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 92 லட்சத்து 42 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். இவ்விழாவில்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் க.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்புரை வழங்கினார்கள். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா முன்னிலையுரை ஆற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் (முதுகுளத்தூர்) எஸ்.பாண்டி வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி வரவேற்புரை வழங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்.சி.சீனிவாசன் விழா பேருரையாற்றி பேசியதாவது:- ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தது. தென்னக அரசியலில் தேவர் கையிலெடுத்த இந்த குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய சென்னை மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த குற்றப்பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் முதன் முதலாக போராடினார். தேவர் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை 1930-ல் உருவாக்கி தேவரே தலைமையேற்று நடத்தினார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்து செல்ல வைத்தியநாத அய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலய பிரவேச நடவடிக்கை குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாத அய்யர், எம்.எம்.ஆர்.சுப்புராமன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். ஆலய பிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும், உறுதிமொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சி கோயிலில் ஆலய பிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார். அந்த ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாத அய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடி கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது.
1927ம் ஆண்டு தனது 19ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை சேர்த்துக் கொண்டார். 1937 மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்;ந்த ராமநாதபுரம் ராஜாவை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்றார். 1939இல் சுபாஸ் சந்திரபோஸ் பார்வேடு பிளாக் கட்சியை உருவாக்கிய போது அதில் முக்கிய பங்கு வகித்து இந்திய அரசியலில் மிகப் பெரிய இடத்திற்கு சென்றார். 1946இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றார். 1952ம் ஆண்டு குடியரசு பெற்ற பின் நடைபெற்ற முதல் பொது தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று இதில் முதுகுளத்தூர் சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார். 1957ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். 1962ல் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் போட்டி தொகுதிக்குச் செல்லாமலே மாபெரும் வெற்றி பெற்றார். இவர் நான்குமுறை சட்டமன்ற தேர்தலிலும், மூன்று முறை நாடாளுமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றார். 1959ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி நாடாளுமன்றத்தில் பேச மாலை 4.45 முதல் 5 மணி வரை கால் மணி நேரம் மட்டுமே பேச ஒதுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் காலத்தில் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்கப்பட்டது. சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு, புரட்சித் தலைவி அம்மா சிலை அமைத்து தந்தார்கள். 09.02.2014 அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 13 1ஃ2 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாறு ஆறாவது பாடப்புத்தகத்தில் முதல் இரண்டு பக்கங்கள் இடம் பெற்றிருந்தது. அதற்கு பிறகு வந்த நமக்கெதிரான அரசு அதை எடுத்து விட்டது. சமீபத்தில் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, இது என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஈ கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரிடம் எடுத்து சொல்லியிருக்கிறேன். தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேசியம் காத்த செம்மல் என்ற தலைப்பில் இரண்டு பக்கத்திற்கு பதிலாக 4 பக்கங்களுக்கு இடம் பெற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பேசினார். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன்;, செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் (களவிளம்பரம்) த.சரவணன், பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், மாவட்ட வனஉயிரினக் காப்பாளர் டி.கே.அசோக்குமார், உட்;பட அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.