முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வல்லபாய் படேல் கட்டியெழுப்பிய தேசத்தின் நிறுவனங்களை சிதைக்க நினைப்பது துரோகம்: ராகுல் தாக்கு

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டின் முதல் துணை பிரதமர் படேல் கட்டியெழுப்பிய தேசத்தின் நிறுவனங்களை சிதைக்கும் செயல், அவருக்கு செய்யும் துரோகம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே சாதுபேட் என்ற இடத்தில் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், அதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-

சர்தார் படேல் மிகச்சிறந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்ட தியாகி. நாட்டை ஒற்றுமை படுத்தி, சமஸ்தானங்களை இணைத்ததால் அவர் இரும்பு மனிதர் என புகழப்படுகிறார். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கியதில் படேலின் பங்கு மகத்தானது. மதவாதத்தை சகித்துக் கொள்ளாதவர். இந்திய நிறுவனங்களை கட்டி எழுப்பியவர். அந்த நிறுவனங்களை சிலர் அழிக்க முயல்வது அவருக்கு செய்யும் துரோகம். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து