முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலுக்காக அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஜப்பான் இளவரசி

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ : சாமானியக் குடிமகனான தனது காதலரைக் கரம் பிடிக்க அரச குடும்பத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் ஜப்பான் இளவரசி அயாகோ.

ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினரான டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ, நிப்பான் யூசென் கப்பல் நிறுவனத்தில் பணிபுரியும் கேய் மோரியாவைக் காதலித்தார். ஜப்பான் அரச குடும்பத்தின் விதிமுறைகளின்படி, சாமானியக் குடிமகனைத் திருமணம் செய்து கொள்ள இளவரசிகள் விரும்பினால் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேறியாக வேண்டும். தன் காதலில் உறுதியாக நின்ற அயாகோ, விதிமுறையை பின்பற்றி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி உள்ளார். டோக்கியோவில் உள்ள மெய்ஜி புனிதத்தலத்தில் நடந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து