முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்ற பூனை வியட்நாமில் நடந்த அதிசயம்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

யேன்பாய் : வியட்நாமில் உள்ள யேன் பாய் என்ற பகுதியில்  இருக்கும் ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைய பார்த்தது. அதை வீட்டு வாசப்படியில் உட்கார்ந்திருந்த பூனை பார்த்து விட்டது. உடனே அந்த பாம்பை வீட்டிற்குள் போவதற்கு பூனை வழியே விடவில்லை. அது மட்டுமில்லாமல் அந்த பாம்பிடம் சண்டைக்கு போய் விட்டது பூனை. இதை கண்ட பாம்பும் பூனையை கடிக்கப் போனது. பாம்பு சத்தமும், பூனை சத்தமும் சரமாரி வந்து விழுந்தது.

தன் கால்களில் உள்ள நகங்களை வைத்து பாம்பை பிராண்டி எடுத்து விட்டது பூனை. ஒவ்வொரு முறை பாம்பு கடிக்க போகும்போதெல்லாம் பூனை முன்னங்காலை தூக்கி கொண்டு வந்து பிராண்டி விட்டது. இப்படியே பிராண்டி பாம்பு சோர்வாகி கடைசியில் இறந்தே போய் விட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து