முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடனா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவி நயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

150 நாட்கள்...

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார் கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து  பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 2.11.2018 (இன்று) முதல் 31.3.2019 வரை 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

பாசன வசதி...

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், செங்கோட்டை மற்றும்   கடையநல்லூர்  வட்டங்களிலுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து