முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகாருக்கு ஆளான கூகுள்: வாக்கெடுப்பு நடத்தி கம்பெனி நடத்த முடியாது:சுந்தர் பிச்சை

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,பாலியல் புகாருக்கு ஆளான கூகுள் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் சிலரை நிர்வாகம் பாதுகாக்க முயலுவதாக கூறி அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வாக்கெடுப்பு நடத்தி நிறுவனம் நடத்த முடியாது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு நிர்வாகி ரூபின், 2014-ம் ஆண்டு சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாருக்கு ஆளானதாகவும், இதனால் அவர் நீண்ட விடுமுறையில் அனுப்பப்பட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.இதுபற்றி கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு இ - மெயில் மூலம் சில விளக்கங்களை அளித்தார். உயரதிகாரிகள் யாருக்கும், சக ஊழியர்களுடன் பாலியல் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்கள் பணியாற்ற முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கிய 48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் மிக மூத்த நிர்வாகிகள் என தெரிவித்து இருந்தார்.எனினும் கூகுள் நிறுவனம் பாலியல் புகாருக்கு ஆளான மூத்த நிர்வாகிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூகுள் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சில ஆயிரம் பேர் நேற்று ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுந்தர் பிச்சை கூறியதாவது:-ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அநீதி நடக்கும் போதும், தவறு இழைக்கப்படும் போதும் குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் எதையும் சட்டத்தின் கீழ் மட்டுமே அணுக முடியும். அவர்களின் குறைகளை கேட்டு தேவையானதை செய்துள்ளோம். நிறுவனத்தின் செயல்பாடு என்பது விருப்பு, வெறுப்புகளை கடந்தது. வாக்கெடுப்பு நடத்தி எந்த ஒரு நிறுவனத்தையும் நடத்த முடியாது. நான் தான் இன்னமும் உங்கள் மேலதிகாரி, இதனை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து