முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு 20 ஆண்டுகளாகக் கடிதம் எழுதும் குஜராத் மனிதர்

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

காந்திநகர்,களத்தில் உயிர்த் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு 20 ஆண்டுகளாக கடிதம் எழுதி வருகிறார் ஜிதேந்திர சிங். பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றும் இவர் குஜராத்தைச் சேர்ந்தவர்.

கடிதம் எழுதி வருவது குறித்து ஜிதேந்திர சிங் கூறியதாவது, கார்கில் போரின் போது வீரர்கள் தங்களின் குடும்பங்களுக்குக் கடிதம் எழுதுவர். அவை பெரும்பாலான நேரங்களில் ராணுவ வீரர்கள் உயிர் நீத்த பிறகே வீட்டுக்குப் போய்ச் சேரும். அப்போதுதான் களத்தில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்குக் கடிதம் எழுதலாம் என்று முடிவெடுத்தேன். இதனை 20 ஆண்டுகளாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை ராணுவத்தில் தனது மகனை இழந்த தந்தை ஒருவர், நான் எழுதிய கடிதத்தைப் படித்தார். அப்போது தனது மகனுடன் பேசுவது போலவே உணர்ந்ததாகக் கூறினார்.மகனை, கணவனை, தந்தையை இழந்து தவிப்பர்களுக்கு, தங்களை நினைத்துப் பார்க்கவும் ஒருவர் இருக்கிறார் எனும் நினைப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் வீடுகளுக்கும் நான் சென்றிருக்கிறேன். அங்கிருந்து தியாகிகளின் நினைவிடம் அமைக்க ஒரு கைப்பிடி மண்ணைக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து