எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம் தேனி ஒன்றிய கழகம் சார்பில் கழகத்தின் 47வது தொடக்க விழா பொதுக்கூட்டம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன் தலைமை தாங்கினார். தயாளன், வீரமணிகர்ணன், முத்துபாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் ராமர் வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் திண்டுக்கல் குணசேகரன், குமரி பிரபாகரன் அகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசும்போது கழகத்தின் 47வது தொடக்க விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆலமரமாக, விருட்சமாக வளர்ந்துள்ள நமது கழகத்தில் வந்து இணைந்திருக்கின்ற, தாய்கழகத்திற்கு திரும்பி வந்த அனைவருக்கும் உரிய மரியாதையை என்றென்றும் நமது கழகம் வழங்கி வருகின்றது. திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சி கட்டிலில் ஏற்றி கருணாநிதியை முதல்வராக்குவதற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உழைப்பும், புரட்சித்தலைவருக்காக தமிழக மக்கள் கொடுத்த ஆதரவும் தான். இந்நிலையில் திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் கோட்பாடான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையிலிருந்து வழிதவறி நடந்த கருணாநிதியிடம் தவறை சுட்டிக்காட்டிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பொய்பழி சுமத்தி கட்சியிலிலிருந்து கருணாநிதி நீக்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் அவருடைய ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள் சந்தித்து தொண்டர்களுக்காக ஒரு இயக்கத்தை துவக்குங்கள் என்று கூறினர். அதனை தொடர்ந்து 1972ல் தொண்டர்கள் இயக்கமாக கழகத்தை தோற்றுவித்து; மானசீக குருவான அண்ணாவின் பெயரையும் உருவத்தையும் சேர்த்து அதிமுகவை துவக்கினார். 1973ல் திண்டுக்கல் இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 1977ல் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து தனது இறுதிகாலம் வரை தமிழகத்தில் புரட்சித்தலைவர் ஆட்சி செய்தார். புரட்சித்தலைவர் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களை கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தவுடன் கழகத்திற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடுமையாக உழைத்தார். புரட்சித்தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நடைபெற்ற தேர்தலில் கடுமையாக உழைத்து கழகத்தை அமோக வெற்றி பெறச் செய்தார். புரட்சித்தலைவர் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் நமது கழகம் தொண்டர்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கினார்.
அவருடைய கொள்கைப்படி கடுமையாக உழைத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 17 லட்சம் தொண்டர்களாக இருந்த கழகத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றினார். புரட்சித்தலைவர் 3 முறை, புரட்சித்தலைவி 4 முறை என 7 முறை தமிழகத்தை ஆண்ட கட்சி என்ற பெருமையை நமது கழகம் பெற்றிருக்கிறது. மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தற்போது பாராளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உருவாக்கி இருக்கிறார். மேலும் நமது பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபனை இந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 3வது வேட்பாளர் என்ற பெருமையை பெற செய்தார். அம்மாவுடன் இருந்த சசிகலா குடும்பத்தினர் 16 பேர் துரோகம் செய்தனர் என்று கட்சியிலிருந்தும், வீட்டிலிருந்தும் விரட்டினார். துரோகம் செய்தது தெரியாது என்றும், என்னை மட்டும் தங்களுக்கு சேவை செய்ய சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிய சசிகலாவை மட்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சேர்த்துக் கொண்டார். தினகரனின் தில்லாலங்கடி வேலையால் ஆர்.கே. நகரில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றது. ஆனால் வரும் இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என தங்கதமிழ்செல்வன், கதிர்காமு ஆகியோருக்கும் தெரியும். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கழகத்தையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். கழகத்தின் 50வது பொன்விழா, கழகத்தின் நூற்றாண்டு விழாவின் போதும் நமது கழக ஆட்சியே தமிழகத்தில் இருக்கும். வரும் இடைத்தேர்தலிலும், பொதுதேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெறும். அதற்கு நாம் அனைவரும் ஒருமித்து செயல்படுவோம் என்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், மாவட்ட பொருளாளர் செல்லமுத்து, மாவட்ட கழக துணை செயலாளர் முருக்கோடை ராமர், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலைமயிலை கொத்தாளமுத்து, சின்னமனூர் விமலேஸ்வரன், நகர் கழக செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி கிருஷ்ணகுமார், கம்பம் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் ஆனந்தகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் நாகலாபுரம் முருகேசன், மாவட்ட கழக துணை செயலாளர் வசந்தாநாகராஜ், தேனி வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயலட்சுமிகணேசன், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாலசந்தர், பேரூர் கழக செயலாளர்கள் பழனிசெட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி, வீரபாண்டி ரத்தினசபாபதி, முன்னாள் உத்தமபாளையம் ஒன்றிய கழக செயலாளர் அப்துல்காதர்ஜெய்லானி, தமிழன் பட்டாசுகடை தமிழன், மற்றும் நிர்வாகிகள், தொணடர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: