முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படேல் சிலையை தொடர்ந்து அயோத்தியில் 151 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட ராமர் சிலை உ.பி. பா.ஜ.க. அரசு முடிவு

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அயோத்தி,குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலை திறக்கப்பட்டுள்ளநிலையில் அயோத்தியில் சரயூ நதிக்கரையில் 151 மீட்டர் உயரத்தில் ராமர் சிலையை நிறுவ அம்மாநில பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.இதுபோலவே மும்பை அருகே கடலில் மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் பிரமாண்ட சிலை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், அயோத்தி மேயருமான ரிஷகேஷ் உபாத்யாயா கூறுகையில்,அயோத்தியில் சரயு நதிக்கரையில் 151 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ராமர் சிலை அமைக்கப்பட்டால் அது சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்க்கும் என உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான அறிவிப்பு தீபாவளி அன்று வெளியிடப்படும் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து