முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம்

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராம்நகர்,கர்நாடகாவில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு வாக்குச் சாவடிக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடகாவில் நேற்று மூன்று லோக்சபா தொகுதிகள், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றன. பெங்களூர் அருகேயுள்ள, ராம்நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மொட்டேதொட்டி என்ற பகுதியில் பூத் எண் 179 உள்ளே நேற்று திடீரென ஒரு பாம்பு புகுந்து விட்டது. இதனால் தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாம்பு பிடிப்பவர்கள், வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்பு உயிரோடு சுவற்றுக்கு அந்த பக்கம் தூக்கி வீசப்பட்டது. பாம்பு ஓடுவதையும் அதை பிடிப்பதற்கு பாம்பு பிடிப்பவர் முயற்சி செய்வதும் வீடியோவாக பதிவாகி வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து