முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாகரத்து கோரி லல்லு மகன் மனு

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா : பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத்தின் மூத்த மகனும், அந்த மாநில சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப், பாட்னா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேஜ் பிரதாப் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். சில காரணங்களால் அவரால் மனு தாக்கல் செய்ய முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து, தற்போது மனு தாக்கல் செய்தார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேஜ் பிரதாப் தாயாரும், பிகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மனைவி ஐஸ்வர்யா ராய், மாமனார் சந்திரிகா ராய் ஆகியோரிடம் மணமுறிவு முடிவு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கால்நடை தீவின ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் லல்லு பிரசாத் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சந்திரிகா ராய், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாகப் பதவி வகித்து வருகிறார்.

கடந்த மே மாதம், தனது தாத்தாவும், முன்னாள் முதல்வருமான தரோகா ராய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யா ராயின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணமாகி 6 மாதங்களாகியிருக்கிற நிலையில் விவாகரத்து கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து