முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் இந்தியா 5-ஆவது இடத்துக்கு முன்னேறும் - அருண் ஜெட்லி நம்பிக்கை

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா அடுத்த ஆண்டு ஐந்தாவது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை தொடர்பான நிகழ்ச்சி, டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அருண் ஜெட்லி, மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

உலக அளவில் பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் ஜப்பானும் உள்ளன. நான்காவது இடத்தில் ஜெர்மனியும், 5-ஆவது இடத்தில் பிரிட்டனும் உள்ளன.

கடந்த 2017-ஆம் ஆண்டில், 6-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸை 7-ஆவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்துக்கு இந்தியா முன்னேறியது.

இதனிடையே, பிரெக்ஸிட் பிரச்னையால், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டில் 5-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனை ஆறாவது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்துக்கு முன்னேறிவிடும்.

மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், ஊழல்களாலும் உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து