முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளித்திருநாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சி,வளம் நிறையட்டும், வாழ்வு சிறக்கட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும், வளம் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட “தீபாவளி” வாழ்த்துச் செய்தி வருமாறு:-
தீபங்களின் ஒளி...நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலத்துடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமகள் துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சுடர்விடும் தீபங்களின் ஒளிபோல மக்கள் மனமெல்லாம் இனிமை பொங்கும் திருநாளாகவும், உள்ளத்திலுள்ள இருள் விலகி புத்தொளி பிறக்கும் நன்னாளாகவும் தீபாவளி விளங்குகிறது.

மகிழ்ச்சி நிறையட்டும்....தீப ஒளித் திருநாளில், மக்கள் அதிகாலை எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தாடைகளை அணிந்து, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, இறைவனை வணங்கி, இனிப்புகளை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். இத்தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும், வளம் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து