முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகமில்லாத தாய் உட்கார தன் முதுகை நாற்காலியாக்கிய மகன்

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

நான்சாங், சீனாவில் நான்சாங் என்ற இடத்தில் ஒருவர் தன் அம்மாவை கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அந்த அம்மாவுக்கு வயது 84 ஆகிறதாம். ரொம்பவும் தள்ளாடி தள்ளாடி நடக்க முடியாமல்தான் ஆஸ்பத்திரிக்குள்ளேயே நுழைந்தார். ஆனால் ஆஸ்பத்திரி ஹாலில் உட்கார சேர் இல்லை. அதுவும் இல்லாமல் டாக்டர்கள் வர நேரமாகும் என்று சொல்லி விட்டார்கள். அம்மாவும் டாக்டர் வரும் வரை புத்தகம் படிக்க வேண்டும் ஆசைப்பட்டார். அதுவரை அம்மாவை நிற்க வைக்க முடியாமல் மகன் சேரை தேடி இங்கும் அங்கும் ஓடினார்.

தேடி பார்த்தும் நாற்காலி எங்குமே கிடைக்காததால், தன் அம்மாவை உட்கார வைக்க தன் முதுகையே சேர் போல மாற்றி குனிந்து கொண்டார். அவர் முதுகில் அந்த அம்மா ஏறி உட்கார்ந்து கொண்டார். கொஞ்ச நேரம்கூட தன் தாயை நிற்க வைக்க மனசில்லாத மகன், இப்படி தன் முதுகையே சேராக மாற்றி இடம் அளித்தது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மகன் உட்கார்ந்து கொள்ள, அவன் முதுகு மீது அம்மா உட்கார்ந்து கொள்வதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓடிச்சென்று அந்த அம்மாவுக்கு ஒரு சக்கர நாற்காலியை கொண்டு வந்து கொடுத்தனர். இதை பற்றி மகன் சொல்லும்போது, இதெல்லாம் என்ன பிரமாதமான விஷயமா? நான் குழந்தையா இருக்கும் போது எங்க அம்மா என்னை எத்தனை முறை தாங்கி பிடிச்சிருப்பாங்க என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து