முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கேதார்நாத், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமரான பிறகு ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடி. 2014-ம் ஆண்டு அவர் சியாச்சின் மலை சிகரத்திற்குச் சென்று அங்கு தீபாவளியை படையினருடன் கொண்டாடினார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி. இந்தியா - பாகிஸ்தான் போரின் 50-வது ஆண்டையொட்டி பஞ்சாப் எல்லைக்கு அவர் சென்றிருந்தார்.

2016-ம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பிரதமர் மோடி அங்கு இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினார் மோடி. 2017-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்
பிரதமர் மோடி.

அதை தொடர்ந்து கடல் மட்டத்திலிருந்து இமய மலைத் தொடரில் 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் சிவன் கோவிலுக்கு நேற்று காலை சென்று அங்கு பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இதையடுத்து அருகில் உள்ள பனி சூழ்ந்த குகைக்குச் சென்ற அவர் அங்கு தியானம் செய்தார். தியானத்தை முடித்துக் கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து ராணுவ முகாமுக்கு புறப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் ராணுவ முகாமுக்குச் சென்று அங்கு ராணுவ வீரர்களைச் சந்தித்தார். 5000-க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு பிரதமருக்காக கூடியிருந்தனர். அவர்களிடையே பிரதமர் பேசினார். தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பேசி முடித்த பிறகு ராணுவத்தினருக்கு தன் கையால் ஸ்வீட் எடுத்து ஊட்டி விட்டார் பிரதமர் மோடி. இதைப் பார்த்து ராணுவத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து