முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த தென்கொரிய அதிபரின் மனைவி

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மனைவி கிம் ஜங் சூக், ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்தார். அப்போது உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

அரசு முறைப் பயணமாக தென்கொரிய அதிபர் மனைவி கிம் ஜங் சூக் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை அன்று டெல்லி வந்த கிம் ஜங் சூக், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நேற்று முன்தினம் காலை அயோத்தியாவில் ராணி ஹக் பூங்காவில் அமைந்துள்ள ராணி ஹக் நினைவிடத்தை உத்தரப் பிரதச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கிம் ஜங் சூக்கும் திறந்து வைத்தனர். அப்போது இந்திய மற்றும் தென்கொரியக் கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் இரவு அயோத்தியில் நடைபெற்ற தீபோத்ஸவ விழாவில் முக்கிய விருந்தினராகவும் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து கிம் ஜங் சூக் நேற்று உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். அவருடன் உத்தரப் பிரதேச அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் ஷர்மாவும் ரீட்டா பகுகுணா ஜோஷி ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து