எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அரசு தேர்வாணயத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 17 ஆயிரம் பேர் அரசு வேலைவாய்ப்புக்கு எந்த புகாரும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னையில் இருவரும் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தனர், அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் முற்றிலும் வெளிப்படைத் தன்மையினை கொண்டு வரும் விதமாக தகுந்த மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் ஆணையம் இம்முயற்சிகளை எடுத்து வருகின்றது.
தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது தேர்வர்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு ஓரே இடத்தில் பதில் பெறுவதற்கு ஏதுவாக அண்மையில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய குறும்படம் ஒன்றை Youtube தளத்தில் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது பெரும் வரவேற்பைப் பெற்று பல்லாயிரக்கணக்கான தேர்வர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கும் முறையில் இருந்து இணைய வழியில் அவர்தம் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டதினால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது.
2010-ம் ஆண்டு பல்வேறு தேர்வுகளுக்கு மொத்தம் 17.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது இணையவழியே விண்ணப்பம் பெறப்படும் நிலையில், 40 லட்சம் வரையில் ஓராண்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இச்செயல்பாட்டினால் தேர்வாணையத்தின் பணிச்சுமையை குறைந்ததோடு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைமீதான நம்பகத் தன்மையை விண்ணப்பதாரர்களிடையே அதிகரித்துள்ளது.
தேர்வுமுறையில் மாற்றம்
கடந்த ஓர் ஆண்டு காலமாக தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தேர்வு எழுதுபவர்களின் அனைத்து விவரங்களும் அடங்கிய கொள்குறி (OMR) விடைத்தாள்கள் வழங்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தேர்வு குறித்து தேர்வர்கள் மனதில் இருந்த ஐயப்பாடுகள் நீக்கப்பட்டதுடன் எவ்வித தவறும் நிகழாத வண்ணம் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்காக தேர்வாணையத்திற்கு நேரில் வரும் நடைமுறை இருந்து வந்தது. இதனால் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்தம் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் நேரில் வந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒரு தேர்வர் நேரடியாகவோ பெற்றோர் / பாதுகாவலருடனோ கலந்தாய்வுக்கு தேர்வாணையத்திற்கு நேரடியாக வந்து செல்ல சுமார் 2,000 ரூபாய் பயணச்செலவு உள்ளிட்ட பொருட்சுமையுடன் காலவிரயமும் ஏற்படுகிறது என்பதை கவனமுடன் பரிசீலித்த தேர்வாணையம் இணைய வழியிலேயே தேர்வர்கள் அவர்தம் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொகுதி- IV தேர்விற்காக 31,424 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் 35 நாட்களுக்குள் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளன. இதே எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சான்றிதழ் சரிபார்க்க 157 நாட்கள் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயல் மூலம் சுமார் ஆறு கோடி ரூபாய் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படயிருந்த செலவும் வீண் அலைச்சலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு போன்ற பல்வேறு பணிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியே தகவல் பறிமாற்றம் செய்யப்பட்டு தாமதம் எதுவும் இன்றி குறித்த நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்றன.
தேர்வு முடிவுகள்
மேலும் கடந்த 3 மாதங்களாக தேர்வாணையம் வெளியிடும் அனைத்து அறிவிக்கைகளிலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு அதே காலகட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர ஒரு நாளில் 100 தேர்வர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு பணி ஒதுக்கீட்டாணை வழங்கப்பட்டு வந்தது. அண்மையில் நடைபெற்ற உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கான தெரிவுக்கு ஒரே நாளில் சுமார் 800 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணையும் அன்றே வழங்கப்பட்டு தேர்ந்தோர் பட்டியலும் துறைத்தலைவருக்கு அன்றையதினமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து வெறும் 67 நாட்களில் பணி ஒதுக்கீட்டாணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் நடைபெற்ற நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தேர்வு அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் முதனிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தேர்ந்தோர் பட்டியல் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஒருங்கிணைந்த பொறியியல் பணியாளர்களுக்கான தேர்வு முடிவுகள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி-I க்கான முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் தவிர்த்து எந்த ஒரு தேர்வு முடிவுகளும் மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவையில் இல்லை. மேலும் நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தேர்வு முடிவு கால அட்டவணையும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன.
தேர்வு அறிவிக்கைகளைப் பொறுத்த வரையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் 25 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் மேலும் பல்வேறு பதவிகளுக்கான 20 அறிவிக்கைகள் வரவிருக்கின்றது. தேர்வாணைய வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் நடப்பாண்டில் 17,000-க்கும் அதிகமான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசின் பல்வேறு துறைகளுக்கும் எவ்வித குறைபாடுகளுக்கும் இடமின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தேர்வாணையத்தில் செயல்பட்டு வரும் மந்தனத்தன்மை கொண்ட துறைகள் மற்றும் பிரிவுகள் அனைத்தையும் கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் சம்மந்தப்பட்ட நபர்கள் தங்களுடைய கைரேகை பதிவுகளின் மூலம் அவர்தம் விவரம் சரிபார்க்கப்பட்டே அறைக்கதவுகள் திறக்கும் வண்ணம் நவீன பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் நிரந்தரப் பதிவாக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வரப் பட்டுள்ளது.
தொகுதி 1 தேர்வுகள்
2017-ம் ஆண்டுக்கான தொகுதி-I க்கான முதன்மை எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிட அனைத்து நடைவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டள்ளன. இனிவரும் காலங்களில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல்நிலைத் தேர்வும், 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும், 3 மாதங்களில் எழுத்துத் தேர்வு முடிவுகளும், 15 நாட்களில் நேர்முகத் தேர்வும் நடத்தி, 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களின் நலன் கருதி மேற்கூறிய பல்வேறு முன்முயற்சிகளை தேர்வாணையம் எடுத்து வருகிறது. தேர்வர்கள் தேர்வு குறித்து அவ்வப்போது தவறாக வரும் செய்திகளையோ வதந்திகளையோ இடைத் தரகர்களையோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தை நேரிலோ, [email protected] மின்னஞசல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.