முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக துணைமுதல்ர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் அ.ம.மு.க நிர்வாகிகள் தொண்டர்கள்

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி, - தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் விலகி, கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தாய்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் பல நிர்வாகிகள் வர தயாராகி கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமமுக நிர்வாகிகளாக  இருந்த உத்தமபாளையம் ஒன்றிய கழக செயலாளர் அப்துல்காதர்ஜெய்லானி, கோடாங்கிபட்டி தமிழன், கடமலை-மயிலை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் சேர்மலை உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கராஜபுரம், பாலூத்து, கோவில்பாறை, மேலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி  தங்களை கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இணைந்தவர்கள் கூறும்போது அமமுகவில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மரியாதை இல்லை. நமது கழகத்தை போல் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு பதவி வழங்கப்படுவதில்லை. பணம் படைத்தவர்களுக்கே பதவி வழங்கப்படுகிறது. இதனால் அங்கிருந்து விலகி தாய் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டோம் என்றனர். 
மேலும் தேனி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தாய் கழகத்தில் இணைய தயாராகி கொண்டிருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில்  மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து