முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஹராரே, ஜிம்பாப்வே நாட்டில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 47 பேர் உயிரிழந்ததாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் பால் நியாதி சின்குவாக்கு தெரிவித்த விவரம் வருமாறு:-மாணிக்லேண்டு மாகாணத்தில் இவ்விபத்து நடந்துள்ளது. நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து 156 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ருஸ்பே நகரின் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் இரு குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர்.விபத்துக்குள்ளான போல்ட் கட்டர் மற்றும் ஸ்மார்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு பேருந்துகளும் உள்ளூரிலிருந்து நீண்டதூரம் செல்லக்கூடிய உள்ளூர் பேருந்து நிறுவனங்களைச் சேர்ந்தவைகளாகும். இவ்விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து