முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நடந்த மாகாணத் தேர்தல்கள்: இந்திய வம்சாவளியினருக்கு கூடுதல் இடங்கள்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,அமெரிக்காவில் நாடாளுமன்ற இரு அவைகளுடன்   நடைபெற்ற மாகாணத் தேர்தல்களில் புதிதாகப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், ஏற்கெனவே எம்.பி.க்களாக இருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிளமீளா ஜெயபால், ரோஹித் கன்னா, அமி பேரா ஆகிய நால்வர் மட்டுமே இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றனர். எனினும், இல்லினாய்ஸ் மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட ராம் வில்லிவலம், கென்டகி மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட நீமா குல்கர்னி, வடக்கு கரோலினா மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட முஸ்தாபா முகமது ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், 100 இடங்களைக் கொண்ட செனட் சபையின் 35 இடங்களுக்கும் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதில், அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கீழவையில் (மக்கள் பிரதிநிதிகள் சபை) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.எனினும், மேலவையான செனட் சபையை ஆளும் குடியரசுக் கட்சி தக்கவைத்துக்கொண்டது.இதற்கிடையே, 36 இடங்களில் நடைபெற்ற ஆளுநர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சி நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.இந்தத் தேர்தலுக்குப்பின், ஏற்கெனவே இருந்த இடங்களை விட ஜனநாயகக் கட்சி கூடுதலாக 7 இடங்களை பெற்றுள்ளது. குடியரசுக் கட்சி 6 இடங்களை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து