முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் தமிழகத்தில் கனமழை வாய்ப்பு; சென்னைக்கு மழை வாய்ப்பில்லை:வானிலை மையம்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை:தென் தமிழகத்தில் அடுத்து அரும் 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன், “வியாழக்கிழமை தாய்லாந்து, வளைகுடா மற்றும், அதனை ஒட்டியுள்ள மலாய தீபகற்பத்தில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மத்திய அந்தமான் பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது.10 ஆம் தேதி அந்தமான் மற்றும் தென் கிழக்கு பகுதிகளுக்கும், 11 ஆம் தேதி வங்கக்கடல், வட அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 12 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 13 ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் அடுத்து அரும் 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.சென்னையைப் பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை. கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக நாகை மாவட்டம் சீர்காழியில் 7 செ.மீ., திருவாரூர் மாவட்டம்நன்னிலத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது'' என்று புவியரசன் தெரிவித்துள்ளார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து